NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
    இது போன்ற ஊடகச் செய்திகள் நகைப்புக்குரியவை என்று MEA கூறியுள்ளது

    'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2024
    09:32 am

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற ஊடகச் செய்திகள் நகைப்புக்குரியவை என்று கூறியுள்ளது.

    "நாங்கள் பொதுவாக ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், கனேடிய அரசாங்க ஆதாரம் ஒன்று செய்தித்தாளில் கூறப்படும் இத்தகைய அபத்தமான அறிக்கைகளை அவர்கள் தகுதியான அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும்" என்று MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

    "இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்கள் ஏற்கனவே சிதைந்துவிட்ட எங்கள் உறவுகளை மேலும் சேதப்படுத்துகின்றன" என்று அவர் மேலும் கூறினார்.

    செய்தி

    அமித் ஷா திட்டம் தீட்டி, பிரதமர் மோடிக்கு தெரிவித்ததாக அந்த செய்தி கூறியது

    பெயரிடப்படாத கனேடிய தேசிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி, நிஜ்ஜார் படுகொலை சதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் திட்டமிடப்பட்டது என்றும், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது எனவும் கூறியது.

    எவ்வாறாயினும், பிரதமர் மோடிக்கு எதிரான இந்தக் கூற்றை ஆதரிக்கும் எந்த ஆதாரமும் கனடாவிடம் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

    "மோடிக்குத் தெரியும் என்பதற்கான நேரடி ஆதாரம் கனடாவிடம் இல்லை என்றாலும், இந்தியாவில் உள்ள மூன்று மூத்த அரசியல் பிரமுகர்கள், குறிவைக்கப்பட்ட கொலைகளைப் பற்றித் தொடர்வதற்கு முன் மோடியுடன் விவாதித்திருக்க மாட்டார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி அறிக்கை கூறியது.

    உறவு சிக்கல்

    தொடர்ந்து இந்திய மீது கனடா வைக்கும் குற்றச்சாட்டால் இரு நாட்டு உறவில் சிக்கல் அதிகரிக்கிறது

    இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, எஸ் ஜெய்சங்கர் மற்றும் தோவல் மீது நேரடியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

    இது கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முந்தைய குற்றச்சாட்டுகளால் எழுந்த சர்ச்சைகளை மேலும் தூண்டியுள்ளது.

    கடந்த ஆண்டு, இந்திய-கனடா இராஜதந்திர உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. ஜஸ்டின் ட்ரூடோ, நம்பத்தகுந்த உளவுத்துறை கூறியதை அடுத்து இந்திய அரசாங்க முகவர்களை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தியதில் இருந்து இரு நாட்டு உறவும் விரிச்சலடையத்தொடங்கியது.

    இந்த விவகாரத்தில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று இந்தியா கடுமையாக மறுத்து, இந்த கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தொடர்ந்து நிராகரித்தது வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்? கனடா
    இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள் கனடா
    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ கனடா
    'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':  கனடா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்  ஒருநாள் உலகக்கோப்பை
    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  ஏர் இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா அமெரிக்கா
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா

    பிரதமர் மோடி

    குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி அமெரிக்கா
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் குவாட் குழு
    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு குவாட் குழு
    செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா? மு.க.ஸ்டாலின்

    நரேந்திர மோடி

    இன்று NDA கூட்டத்திற்கு பிறகு, மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் எனத்தகவல்  மோடி
    பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்
    சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025