NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல்

    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக இந்தியா, அமெரிக்க அதிபர் பைடனுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரால் பங்கேற்க இயலாது என கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்தியா மக்ரோனை விழாவில் பங்கேற்க அழைத்துள்ளது.

    அவர் அழைப்பை ஏற்கும் பட்சத்தில், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 5வது பிரெஞ்சு அதிபராவார்.

    இதற்கு முன்னர், முன்னாள் பிரெஞ்சு அதிபர்களான, வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங், நிக்கோலஸ் சார்கோசி மற்றும் பிரான்சுவா ஹாலண்டே ஆகியோர் விழாவில் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    பிரதமர் மோடியை கௌரவித்த பிரான்ஸ்

    முன்னதாக இந்தாண்டு ஜூலை மாதத்தில் பிரான்சில் நடந்த பாஸ்டில் தின (பிரெஞ்சு தேசிய தினம்) விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பிரஞ்சு புரட்சி உருவாக காரணமான பாஸ்டில் சிறை முற்றுகை இடப்பட்ட தினத்தை, அந்நாடு 1789 ஆம் ஆண்டு முதல் தேசிய தினமாக கொண்டாடி வருகிறது.

    1802ல் முன்னாள் பிரான்ஸ் ஆட்சியாளரான நெப்போலியன் போனபார்டே தோற்றுவித்த, கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் விருது வழங்கி பிரதமர் மோடி கௌரவிக்கப்பட்டார்.

    இது அந்த நாட்டில், இராணுவ அல்லது குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும்.

    3rd fard

    2023ஆம் ஆண்டுக்கான இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினர்

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு இந்தியா, பிற நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    அந்த வகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் குடியரசு தின விழாவில் சிறப்பு உறுப்பினர்களாக பங்கேற்றனர்.

    கடந்த, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி பங்கேற்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தினம்
    பிரான்ஸ்
    குடியரசு தலைவர்
    ஜோ பைடன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு காவல்துறை
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்

    குடியரசு தலைவர்

    அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா? புரளி என மறுக்கும் ரஷ்யா ரஷ்யா
    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் அமெரிக்கா
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார் சீனா

    ஜோ பைடன்

    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன் அமெரிக்கா
    'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்  அமெரிக்கா
    அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்  அமெரிக்கா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025