NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?
    சோரன் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா சோரனை முதல்வராக அமரவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2024
    10:05 am

    செய்தி முன்னோட்டம்

    நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினாரால் தேடப்பட்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நேற்று செவ்வாய்க்கிழமை தலைமறைவானார் எனக்கூறப்பட்டது.

    எனினும் கிட்டத்தட்ட 30 மணிநேரம் அமலாக்கத்துறையினரின் கண்களில் மண்ணை தூவி, பின்னர் அன்றிரவே செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மீண்டும் ஊடகத்துறையின் முன்னால் திடீரென தோன்றியது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம், நில மோசடி தொடர்பாக சோரனுக்கு பத்தாவது சம்மன் அனுப்பப்பட்டு, ஜனவரி 29 அல்லது ஜனவரி 31 ஆம் தேதிகளில் அவரது இருப்பை உறுதிப்படுத்தும்படி கேட்கப்பட்டது.

    சோரன், மத்திய புலனாய்வு நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜனவரி 31 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தனது ராஞ்சி இல்லத்தில் விசாரணைக்கு ஆஜராக ஒப்புக்கொண்டார்.

    ஹேமந்த் சோரன்

    ஹேமந்த் சோரன் எப்படி அமலாக்கத்துறை விசாரணையை தவிர்த்தார்?

    ஜனவரி 27 அன்று இரவு, சோரன் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

    சட்ட ஆலோசனைக்காக முதல்வர் டெல்லிக்கு ஒரு சார்ட்டர் விமானத்தில் சென்றதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

    சோரன் டெல்லிக்கு வருவது EDக்கு தெரியவரவே, அவர் புறப்படும் வேளையில் விமான நிலையத்தில் கைது செய்ய, டெல்லி விமான நிலையத்தில் ஒரு குழுவை நிறுத்தியது.

    திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தெற்கு டெல்லியில் உள்ள சோரனின் 5/1 சாந்தி நிகேதன் இல்லத்திற்கு ED குழு வந்த போது, அங்கும் அவர் இல்லை.

    இருப்பினும், சோரன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இல்லத்திற்குத் திரும்பியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

    டெல்லியில் உள்ள அவரது வீட்டில் 13 மணி நேரம் முகாமிட்டுள்ள புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.

    தொடர்ந்து படிக்க

    டெல்லி முதல்வர் உதவியுடன் எஸ்கேப்

    சோரன் வராத நிலையில், அதிகாரிகள் சுமார் ரூ.36 லட்சம் ரொக்கம், ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட இரண்டு BMW சொகுசு கார்கள் மற்றும் சில "குற்றச்சாட்டு" ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    அமலாக்கத்துறை உடனே டெல்லி காவல்துறையை எச்சரித்ததாகவும், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனையை அதிகரிக்கவும் அதன் மூத்த அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இருப்பினும், அவர்கள் கண்களில் மண்ணை தூவி, ஹேமந்த் சோரன், டெல்லியிலிருந்து ராஞ்சிக்கு 1,292 கிமீ சாலைப் பயணத்தை மேற்கொண்டார்.

    எனினும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே,"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு செல்ல சோரனுக்கு உதவியதாகவும், அதன் பின்னர் வாரணாசியில் இருந்து, ஜேஎம்எம் அமைச்சர் மித்லேஷ் தாக்கூர் உதவியுடன் சோரன் ராஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜார்கண்ட்
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது காவல்துறை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி இந்தியா
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இத்தாலி

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    அமலாக்க இயக்குநரகம்

    செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி

    முதல் அமைச்சர்

    பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சென்னை
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி  தமிழக அரசு
    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025