NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம், நோயாளிகளின் நிலை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம், நோயாளிகளின் நிலை என்ன?
    இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    மருத்துவருக்கு கத்திக்குத்து; வேலை நிறுத்தம் அறிவித்த அரசு மருத்துவர்கள் சங்கம், நோயாளிகளின் நிலை என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 13, 2024
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மருத்துவரை கத்தியால் குத்திய நபர், தன்னுடைய தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற காரணத்துடன் டாக்டரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவத்தினை கண்டித்து, அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மேலும், உயிர்காக்கும் அவசர சிகிச்சையைத் தவிர வேறு சேவைகள் வழங்கப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.

    அவர்கள், இந்த தாக்குதலுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பின்னணி

    இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

    விசாரணையில் டாக்டர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய நபரின் பெயர் விக்னேஷ். அந்த நபர், பெருங்களத்தூர் பகுதியில் வசிப்பவர் எனவும், அவரின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும், அதற்கான சிகிச்சைக்காக கடந்த 6 மாதமாக அவர் மருத்துவமனைக்கு வருவது வாடிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதுவரை 6-முறை ஹிமோதெரபி சிகிச்சைக்காக அங்கே வந்திருக்கிறார்.

    ஆனால், அந்த சிகிச்சைகளுக்கு திருப்தி இல்லாமல், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத்தொடங்கியதாக கூறப்படுகிறது.

    தனியார் மருத்துவர்கள், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை வழங்கவில்லை என கூறியதாகவும், அதை நம்பி ஆத்திரப்பட்டு, இன்று காலை டாக்டர் பாலாஜியுடன் 30 நிமிடங்கள் வாக்குவாதத்தில் விக்னேஷ் ஈடுபட்டுள்ளார்.

    அதன் பின்னரே மருத்துவரை கழுத்து, தலை உள்ளிட்ட 7 இடங்களில் கத்தியால் தாக்குதல் நடத்தியதாகக்கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவமனை
    சென்னை
    மருத்துவம்
    மருத்துவத்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    மருத்துவமனை

    எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம் சென்னை
    ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு சென்னை
    புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்து: டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சாதனை புற்றுநோய்
    நடிகர் அஜித்குமார் உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி  நடிகர் அஜித்

    சென்னை

    சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் மழை
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா? காற்றழுத்த தாழ்வு நிலை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் பேருந்துகள்

    மருத்துவம்

    அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை  குழந்தைகள்
    உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம் அறுவை சிகிச்சை
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்! நீட் தேர்வு
    சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு நோய்த்தடுப்பு சிகிச்சை

    மருத்துவத்துறை

    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025