NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி 
    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி 

    எழுதியவர் Nivetha P
    Dec 01, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

    அதில், 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,

    'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    விசாரணை 

    தமிழக அரசு சார்பில் வாதம் 

    இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று(டிச.,1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில், 'சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்' என்று வாதாடப்பட்டதாக கூறப்படுகிறது.

    வழக்கு 

    'மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன்?' என நீதிபதி கேள்வி

    அதன் பின்னர் பேசிய தலைமை நீதிபதி, முதல்முறை மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட உடனே ஆளுநர் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

    ஆனால் அவர் அதனை நிலுவையில் வைத்திருந்து, மீண்டும் ஒரு முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    உடனடியாக சட்டப்பேரவைக்கு மசோதாக்களை அனுப்பாமல் வைத்திருந்தது ஆளுநர் தரப்பிலுள்ள குழப்பங்களை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

    உத்தரவு 

    ஆளுநருக்கு ஆதரவான மத்திய அரசு வாதம் ?

    இதனிடையே மத்திய அரசு, அரசியல் சாசன அடிப்படையில் மசோதாவை கிடப்பில் வைக்க ஆளுநருக்கு உரிமையுள்ளது என்று கூறியதாக தெரிகிறது.

    அதற்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி, 'சட்டத்தினை முடக்கவோ, செயலிழக்க செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை' என்று கூறியுள்ளார்.

    அதேபோல் முதல் அமைச்சர் மற்றும் ஆளுநர் இடையே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி,

    ஆளுநர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து இருவரும் அமர்ந்து பேசி தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வினை காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆளுநருக்கு எதிராக சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதி 

    #BREAKING ஆளுநர் வழக்கு: தலைமை நீதிபதி சரமாரி கேள்வி #SupremeCourtofIndia #TnGovt #Tngovernor #Rnravi #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/ajWIpM1MkQ — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 1, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    மத்திய அரசு
    முதல் அமைச்சர்
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழக அரசு

    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மு.க ஸ்டாலின்
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  மு.க ஸ்டாலின்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் லியோ
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் விவகாரம் குறித்து சீமான் பேட்டி லியோ

    மத்திய அரசு

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் இந்தியா
    அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி உத்தரப்பிரதேசம்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு பிரதமர் மோடி
    அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுவது எப்படி? இந்தியா

    முதல் அமைச்சர்

    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு திருச்சி
    சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்  சுதந்திர தினம்
    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம் ஸ்டாலின்

    ஆர்.என்.ரவி

    மக்கள் இடையே ஒற்றுமை குறைந்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி  சென்னை
    குடும்பத்தினருடன் ஊட்டி ரயிலில் பயணம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி
    தமிழ்நாடு அரசுடன் மோதல் - 4 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்  மு.க ஸ்டாலின்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025