NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்?
    இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2025
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    "இந்தியாவை 48 மணி நேரத்தில் வீழ்த்தும் திட்டத்துடன் இறங்கிய பாகிஸ்தான், இந்தியாவின் கடுமையான பதிலடி காரணமாக, 8 மணி நேரத்தில் போரை நிறுத்த கெஞ்சியது," என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் புனே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சி குறித்து விளக்கம் அளித்தார்.

    "தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி வரும் என்பதை முன்னதாகவே எச்சரித்தோம். 10ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான், 48 மணி நேரத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியா எட்டு மணி நேரத்திலேயே அந்த முயற்சியை முற்றிலும் முறியடித்தது," என்றார் அவர்.

    கோரிக்கை

    போரை நிறுத்த கோரிக்கை விடுத்த பாகிஸ்தான்

    இந்திய விமானப்படை மற்றும் ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலாக பாகிஸ்தான் எல்லை முழுவதும் தாக்குதல்களை பெரிதாக்கியதாகவும் கூறினார்.

    இந்தியாவின் துல்லியமான தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் தரப்பிலிருந்து "போருக்கு இடைவேளை வேண்டுமென்று" தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது என சவுகான் கூறினார்.

    "இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கான அனுபவத்தை, 'ஆபரேஷன் பராக்ரம்' (2001) மூலமாக நாம் பெற்றிருந்தோம்" என்று அவர் கூறினார்.

    தற்போதைய பதிலடி நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை என்றும், பாதுகாப்பு பணிகள் தொடரும் என்றும் சவுகான் குறிப்பிட்டார்.

    இந்த நடவடிக்கை, தாக்குதல்களை துல்லியமாக குறிவைத்து நடத்திய ஒரு முக்கியமான ராணுவ சாதனை என்றும் அவர் வலியுறுத்தினார்.

     பதற்றம்

    தோல்வி குறித்து பதறிய பாகிஸ்தான்

    "பாகிஸ்தான் இந்த முடிவு வர யூகங்களின் அடிப்படையில் இரண்டு காரணம் இருக்கலாம்- ஒன்று, அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் இழந்து கொண்டு இருந்தனர். இரண்டாவது, இந்தியாவின் தாக்குதல் தொடர்ந்தால், இழப்பு கணிசமாக அதிகரிக்கும். அதனால் தான் போரை நிறுத்தும் முடிவை எடுத்தனர்," என்றார் சவுகான்.

    பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் இந்தியாவிற்கு எதிராக பேசிய 'தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய முடியாது' என்ற வார்த்தைக்கு பதிலளிப்பாக, இந்தியா பயங்கரவாதத்தை எதிர்த்து கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும், அது புதிய வரலாறு எழுதும் வகையில் செயல்பட்டிருப்பதாகவும் முப்படை தளபதி சவுகான் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    இந்தியா
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்

    சமீபத்திய

    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்
    செவ்வாய் கிரகத்திலிருந்து பால்வீதி வரை—ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ் நாசா
    வீக்கம் மற்றும் செரிமானத்திற்கு உதவும் சோம்பு; மகத்துவத்தை அறிவோமா? செரிமானம்
    சதுரங்கத்தில் மேக்னஸ் கார்ல்சனை வென்ற குகேஷிற்கு எதிராக கிளம்பிய இனவெறி கருத்துக்கள் டி.குகேஷ்

    இந்திய ராணுவம்

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா
    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    இந்தியா

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ் பீகார்
    அரபிக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கேரளாவிற்கு ஹாஸ்மேட் லாரியை அனுப்பியது தேசிய பேரிடர் மீட்புப் படை கேரளா
    அமெரிக்காவுக்கு எதுக்கு? சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்  எஸ்.ஜெய்சங்கர்

    பாகிஸ்தான்

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது இந்தியா
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பாகிஸ்தான் ராணுவம்

    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்
    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப் பாகிஸ்தான்
    பாகிஸ்தான் எல்லையை நோக்கி ராணுவ வீரர்களை முன்னோக்கி நகர்த்த தொடங்கியதாக தகவல் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025