NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன?
    இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், நேற்று பாராளுமன்ற வாசலில் அமர்ந்து போராட்டத்தில் இறங்கினர்

    வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 20, 2023
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் அவையின் செயல்பாட்டை தடுத்ததற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த இருதினங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    நாடாளுமன்றத்திலிருந்து நேற்று மேலும் 49 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததை அடுத்து, லோக்சபா செயலகம், பல்வேறு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகளை அடிகோடிட்டு சுற்றறிக்கையை வெளியிட்டது.

    இடைநீக்கத்தின் விளைவுகள் குறித்து சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்கு நாடாளுமன்ற அறை, லாபி மற்றும் கேலரிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    "அவர்கள் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடாளுமன்றக் குழுக்களின் அமர்வுகளில் இருந்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயரில் வணிகப் பட்டியலில் எந்த திட்டமும் சேர்க்கப்படவில்லை" என்று மக்களவை சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

    card 2

    இடை நீக்கத்தால் அவர்கள் இழக்கப்போகும் சலுகைகள் என்ன?

    "அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட எந்த அறிவிப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் நடத்தப்படும் குழுக்களுக்கான தேர்தல்களில் அவர்களால் வாக்களிக்க முடியாது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

    இடைநிறுத்தப்பட்ட எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் நிதி சலுகைகள் குறித்தும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதில், "எஞ்சிய அமர்வுக்கு அவையின் நாடாளுமன்ற சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டால், இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவுக்கு(daily allowance) அவர்களுக்கு உரிமை இல்லை."

    முன்னெப்போதும் இல்லாத வகையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலிருந்தும் கூட்டாக 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    லோக்சபாவில் இருந்து 95 பேரையும், ராஜ்யசபாவில் இருந்து 46 பேரையும் குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய பகுதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    card 3

    எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு 

    நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் நடந்ததையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும், பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    அதனை தொடர்ந்தே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த இடைநீக்கத்திற்கு எதிராக டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.

    "எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தவறு. நாங்கள் இதை எதிர்த்துப் போராடுவோம்; இது தவறு.. இதை எதிர்த்துப் போராட நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக டிசம்பர் 22 அன்று அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று கார்கே செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல் உலக வங்கி

    எதிர்க்கட்சிகள்

    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்
    'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்? மக்களவை

    மத்திய அரசு

    இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது உத்தரகாண்ட் உத்தரகாண்ட்
    பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை: ரிசர்வ் வங்கி அதிரடி  பஜாஜ்
    மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரி
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி

    நாடாளுமன்றம்

    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை கொலை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்
    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025