NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா

    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 10, 2024
    08:06 am

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார்.

    முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், கர்நாடக முதல்வருமான சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா (SM கிருஷ்ணா) 2009 முதல் 2012 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர்.

    வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், இன்று அதிகாலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

    எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மாநில மற்றும் மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் கிருஷ்ணாவின் சேவை ஈடு இணையற்றது. IT-BT துறையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கர்நாடகா எப்போதும் அவருக்குக் கடன்பட்டிருக்கும். குறிப்பாக முதலமைச்சராக." என பதிவிட்டார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். #SunNews | #SMKrishna pic.twitter.com/ksP6PtVrtR

    — Sun News (@sunnewstamil) December 10, 2024

    அரசியல் பயணம்

    SM கிருஷ்ணாவின் ஆட்சியில் வளர்ச்சி கண்ட பெங்களூரு

    SM கிருஷ்ணா 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதலமைச்சராக பணியாற்றினார்.

    அவரது ஆட்சிக்காலத்தின் போது பெங்களூருவை நாட்டின் தொழில்நுட்ப மையமாக மாற்றிய பெருமைக்குரியவர்.

    இந்த நகரத்திற்கு "இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு" என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்த பெருமையும் அவரையே சேரும்.

    கர்நாடகாவின் முதலமைச்சராக தனது பங்கிற்கு கூடுதலாக, கிருஷ்ணா தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்தார்.

    2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா ஆளுநராகவும் பணியாற்றினார்.

    2023 ஆம் ஆண்டில், இந்திய அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

    கிருஷ்ணா 2023 ஜனவரியில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    முதல் அமைச்சர்
    பெங்களூர்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    கர்நாடகா

    பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல் பாலியல் தொல்லை
    கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல்  இந்தியா
    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம்  கொலை
    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை  பாலியல் தொல்லை

    முதல் அமைச்சர்

    அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை கர்நாடகா
    மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
    உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழக அரசு

    பெங்களூர்

    மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது கோவா
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது குண்டுவெடிப்பு
    பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு இந்தியா
    பெங்களூரு விடுதிகளில் காலரா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025