NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை

    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்

    எழுதியவர் Srinath r
    Dec 27, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் விசாரிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியர்களை காயப்படுத்தும் தவறை செய்யக்கூடாது என ராணுவத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது நடந்த தாக்குதலில், நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள ராஜ்நாத் சிங் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தாக்குதல் தொடர்பாக, விசாரிக்க பல அப்பாவி மக்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் மூவர் உயிரிழந்தனர்.

    இந்த மரணங்கள் தொடர்பாக இராணுவத்தின் விசாரணையில் இணையுமாறு, ஒரு பிரிகேட் கமெண்டருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது என ராணுவம் கூறியுள்ளது.

    2nd card

    மக்கள் மனங்களையும் வெல்ல வேண்டும்

    இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்களிடம் பேசிய ராஜநாத் சிங், " நீங்கள் மக்களின் பாதுகாவலர்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், பொதுமக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும் என நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்."

    "இந்தியரை காயப்படுத்தும் எந்த தவறையும் நீங்கள் செய்யக்கூடாது" என தெரிவித்தார்.

    ராணுவ வீரர்கள் பெருமக்களுடன் பந்தத்தை உருவாக்க வேண்டும் என எனக் கூறிய அமைச்சர், போர்களை மட்டுமல்லாது மக்களின் மனங்களையும் வீரர்கள் வெல்ல வேண்டும் என பேசினார்.

    ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்திய அவர், ராணுவ வீரர்களை மேலும் விழிப்புடன் இருக்க வலியுறுத்தினார்.

    3card

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் அமைச்சர்

    இன்று அதிகாலை ஜம்முவுக்கு வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர், விரைவில் ரஜோரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, ராணுவ அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதியம் 3 மணியளவில், ராஜ பவனில் உயர் மட்ட அளவிலான பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    இந்த தாக்குதலுக்கு பின்னர், ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜ்நாத் சிங்
    ஜம்மு காஷ்மீர்
    இந்திய ராணுவம்
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ராஜ்நாத் சிங்

    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை  பாஜக
    9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு  யோகா
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி  தீவிரவாதிகள்
    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  நிலநடுக்கம்
    'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மெகபூபா முப்தி
    காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர்  தீவிரவாதிகள்

    இந்திய ராணுவம்

    தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் இந்தியா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025