NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு 
    வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு

    வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு 

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2023
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    தனியார் நிறுவனமான இந்த தொழிற்சாலையில் நேற்று(டிச.,26) நள்ளிரவு 12 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

    இந்த பாதிப்புக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டுவர வசதியாக கடற்கரை பகுதியிலிருந்து தொழிற்சாலை வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கசிவு 

    குழாயில் கசிவு ஏற்பட்ட உறுதி செய்த மாசு கட்டுப்பாடு வாரியம்

    இந்த குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே அப்பகுதி மக்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு நடத்திய பின்னர் மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது.

    மேலும், குழாயின் உடைப்புகளை சரிசெய்து தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே தொழிற்சாலையை இயக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    இதனையடுத்து, இந்த உரத்தொழிற்சாலையை தமிழக அரசு தற்காலிகமாக மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தொடர்ந்து வாயுக்கசிவு குறித்து ஆய்வு செய்து ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    பாதிப்பு 

    தொழிற்சாலையை சுற்றிவளைத்து மக்கள் போராட்டம் 

    இதற்கிடையே, இன்று(டிச.,27) காற்றில் கலந்த ரசாயனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்யவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, தொழிற்சாலையில் ஏற்பட்ட வாசிகசிவால் பாதிப்பு ஏற்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதோடு, தொழிற்சாலை வாசலில் காவலுக்கு நின்ற காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    காவல்துறை கொடுத்த விளக்கம் 

    Watch | சென்னையை அடுத்த எண்ணூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி!

    பதற்றமடைந்த மக்களை அழைத்து அமைதிப்படுத்திய காவல்துறையினர்!… pic.twitter.com/1900iPG3li

    — Sun News (@sunnewstamil) December 27, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழக அரசு அதிரடி உத்தரவு 

    #BREAKING | எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு!#SunNews | #Ennore_GasLeak | #TamilNaduGovt pic.twitter.com/XifAX0Pkt3

    — Sun News (@sunnewstamil) December 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    தமிழ்நாடு

    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம்  சென்னை
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை
    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு அரசு பள்ளி

    தமிழக அரசு

    ஆளுநரின் முடிவுக்கு எதிராக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்  தமிழகம்
    'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழ்நாடு
    ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல் சென்னை
    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழ்நாடு

    காவல்துறை

    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை  கைது
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  சபரிமலை
    ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி  திருச்சி
    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் திருச்சி

    காவல்துறை

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் சபரிமலை
    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்  சென்னை
    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025