NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!

    இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 11, 2024
    02:39 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.

    இஸ்லாமாபாத் மற்றும் லாகூரிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

    பஞ்சாபின் தென்மேற்கு பகுதியில் உள்ள தேரா காசி கான் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

    உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. திடீர் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானும் நடுங்கியது.

    பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், பைசலாபாத், மியான்வாலி, பக்கர், கமாலியா, கானேவால், பல்வால், சினியோட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிகளவு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உயிரிழப்போ, சொத்து சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | டெல்லியில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்!#SunNews | #Pakistan | #Delhi | #Earthquake pic.twitter.com/sQeS63eAsO

    — Sun News (@sunnewstamil) September 11, 2024

    டெல்லி

    டெல்லியில் இரண்டாவது முறையாக உணரப்பட்ட நிலநடுக்கம்

    இரண்டு வாரங்களில் டெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் லேசான நடுக்கம் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.

    ஆகஸ்ட் 29 அன்று, பூமியின் மேற்பரப்பில் இருந்து 255 கிலோமீட்டர் ஆழத்தில் ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் சில வினாடிகள் நீடித்த நடுக்கத்தின் போது கூரை மின்விசிறிகள், நாற்காலிகள் மற்றும் பிற பொருட்கள் அசைவதைக் காட்டியது.

    டெல்லியின் இருப்பிடம், இமயமலைக்கு அருகாமையில் இருப்பதால், செயலில் உள்ள நில அதிர்வு மண்டலத்தில் விழுவதால், பூகம்பங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்
    டெல்லி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    நிலநடுக்கம்

    12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி ஆப்கானிஸ்தான்
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போட்டிக்கட்டணத்தை நன்கொடையாக வழங்கிய ஆப்கான் வீரர் ரஷீத் கான் ஆப்கானிஸ்தான்
    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு  ஆப்கானிஸ்தான்
    ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்திற்குப் பிறகு அதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஆப்கானிஸ்தான்

    டெல்லி

    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு  இந்தியா
    சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு  அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு  கனமழை
    டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததை அடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஆய்வு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025