NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு 
    சென்னைக்கு வரும் 8 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    திருத்தியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயல் தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதால், நேற்று மாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கி விமான சேவைகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர சென்னைக்கு வரும் 8 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

    குறிப்பாக மும்பை, அபுதாபி, பஹ்ரைன், துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

    cwkj

     மிக்ஜாம் புயல் காரணமாக 20 விமான சேவைகள் ரத்து 

    சென்னையில் வானிலை சீரானதும் அந்த விமானங்கள் சென்னைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய், ராஜமுந்திரி, விஜயவாடா, திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 10 விமானங்களும், அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்களும் என மொத்தம் 20 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி உள்பட 14 புறப்படும் விமானங்களும், 12 வருகை விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

    cwkam

    மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது 

    கொட்டித்தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    இந்த மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையில் பெருங்குடியில் தான் அதிகபட்ச மழைப்பொழிவு(24 சென்டிமீட்டர்) பதிவாகி உள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக சென்னை மீனம்பாக்கத்தில் 20 சென்டிமீட்டர் மழையும், வளசரவாக்கத்தில் 19 சென்டிமீட்டர் மழையும், அண்ணாநகரில் 18.3 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 18.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழகம்
    கனமழை
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    ₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் திருச்சி
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் மன்சூர் அலிகான்
    கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா நடிகர் சூர்யா
    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்

    தமிழகம்

    சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  இஸ்ரோ
    அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம்  சென்னை
    உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த கார்த்திகேயன் முரளி செஸ் போட்டி

    கனமழை

    தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
    தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமழை வாய்ப்பு  மழை
    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் மழை

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025