NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
    திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

    திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

    எழுதியவர் Nivetha P
    Nov 22, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.

    இந்நிலையில் இதற்கான விளக்கத்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் அளித்துள்ளது.

    இதற்கான ஆராய்ச்சியில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி, கோவை கே.எம்.சி.எச். மற்றும் பி.எஸ்.ஜி.மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிக்கழகம், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் முடிவாக தற்போது 12 பக்கங்கள் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கொரோனா தடுப்பூசி 1 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது, 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கொரோனா 

    729 பேரின் மரணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அறிக்கை வெளியீடு 

    மேலும் இந்த திடீர் மரணங்களுக்கு மதுப்பழக்கம், சிகரெட், குடும்ப வரலாறு, தவறான வாழ்க்கை முறைகள், மிக அதிகளவு உடல் உழைப்பு,

    இறப்பதற்கு 48 மணி நேரத்திற்குள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டது போன்றவைகள் தான் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

    எனவே, இளம் வயதினரிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியில் துவங்கப்பட்ட இந்த ஆய்வு கடந்த மார்ச் மாதம் வரை நடந்துள்ளது.

    இந்த காலகட்டத்திற்கிடையே உயிரிழந்த 729 பேரின் மரணங்களையும் ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா தடுப்பூசிகள்
    மருத்துவ ஆராய்ச்சி
    மருத்துவக் கல்லூரி
    மருத்துவமனை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் ஆரோக்கியம்

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025