NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை

    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    07:36 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    நேற்று(டிச.,20)ஒரே நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுவரை 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிகிறது.

    மாவட்ட வாரியாக பார்த்தால், சென்னையில் 29 பேர், கோவையில் 13 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 13 பேர், செங்கல்பட்டில் 8 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நேற்றைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    இதே போல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கொரோனா 

    கர்ப்பிணி பெண்கள், வயதானோர் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தல் 

    இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள், வயதானோர் முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    தற்போது பரவும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனாவின் பொதுவான விதிமுறைகளை கடைபிடிப்பது சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அண்டை மாநிலமான கர்நாடகா கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் ஒன்றுக்கூட தடை விதிக்கப்படவில்லை, மாநிலம் விட்டு மாநிலம் செல்லத்தடையில்லை என்றும் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளிக்காட்சி மூலம் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கேரளா
    கர்நாடகா
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தமிழ்நாடு

    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    மிக்ஜாம் புயல்: அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது மிஜாம் புயல்  ஆந்திரா

    கேரளா

    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு ராமேஸ்வரம்
    துபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர்  துபாய்
    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்

    கர்நாடகா

    புரட்டாசி ஸ்பெஷல்: உடுப்பி ஸ்டைல் சித்ரன்னா செய்முறை  புரட்டாசி
    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  தமிழக அரசு
    காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன காவிரி
    காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு காவிரி

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    அதிக வளர்ச்சி கண்ட, 'வீட்டிலிருந்து வேலை பார்க்கும்' வசதியை அளிக்கும் நிறுவனங்கள்: புதிய ஆய்வு வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025