NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு
    கோவை பன்னாட்டு விமான நிலையம்

    கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 25, 2024
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

    கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான அரசாணை கடந்த 2010இல் அப்போதைய திமுக அரசால் வெளியிடப்பட்டது.

    அதன்பிறகு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்த நிலையில், பணிகள் தாமதமானது.

    இந்நிலையில், இந்த திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட 472.32 ஏக்கர் நிலங்களை ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி ஆகஸ்ட் 16 அன்று விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலத்தை விமான நிலைய இயக்குனருக்கு மாற்றம் செய்வதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

    கலெக்டர்

    கோவை மாவட்ட கலெக்டர் பேட்டி

    கடிதம் வழங்கிய பிறகு, இதுதொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மாவட்ட கலெக்டர் கிரந்தி குமார் கூறுகையில், "திட்டத்திற்கு 634.82 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட வேண்டும்.

    468.83 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமானவை. 134.75 ஏக்கர் பிற துறைகளுக்கு சொந்தமானவை. 29.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்.

    இதில், முதற்கட்டமாக கையகப்படுத்திய 451.74 ஏக்கர் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 20.58 ஏக்கர் சேர்த்து 472.32 ஏக்கர் நிலம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    எஞ்சிய நிலங்களில் சில வழக்குகளாக உள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து நிலங்களையும் விரைவில் விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன." எனத் தெரிவித்தார்.

    கோவை எம்பி ராஜ்குமார்

    கோவை எம்பி ராஜ்குமார் பேட்டி 

    இந்த திட்டத்திற்காக தமிழக அரசு நிலங்களை ஒதுக்கும் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி நடராஜன் கூறியிருந்த நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கோவை எம்பி ராஜ்குமார், கம்யூனிஸ்ட்கள் பாலிசி வேறு, தங்கள் பாலிசி வேறு என அதை நிராகரித்தார்.

    அவர் மேலும், "2010இல் திமுக விடுத்த அரசாணையை இத்தனை ஆண்டுகள் கழித்து திமுக முடித்து வைத்திருக்கிறது.

    தேர்தல் முடிந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நல்ல பரிசை நமக்கு அளித்திருக்கிறார்.

    இதில் தொழில்துறை அமைச்சரின் பங்கும் முக்கியமானது. இனி மத்திய அரசு தான் திட்டத்தை வேகப்படுத்தி விரைவாக செய்து முடித்துத் தர வேண்டும்." என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான நிலையம்
    கோவை
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    விமான நிலையம்

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  டெல்லி
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை

    கோவை

    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  இந்தியா
    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  சிறை
    கோவை மாவட்டம் வால்பாறையில் 20 இடங்களில் குளிக்க தடை  சுற்றுலா
    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம் சிறை

    தமிழ்நாடு

    பச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்  திருச்சி
    மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு? பா ரஞ்சித்
    விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் இடைத்தேர்தல்
    ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் கொலை

    தமிழ்நாடு செய்தி

    சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? தமிழக அரசு தந்த விளக்கம் தமிழக அரசு
    ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு
    அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025