NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி

    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி

    எழுதியவர் Nivetha P
    Oct 15, 2023
    01:20 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.

    இந்த காலி பணியிடங்களுக்கு 10வது மற்றும் 12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலுமிருந்து 12,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இந்த பணிக்கு ரூ.30,000 சம்பளம் மற்றும் சென்னையிலேயே வேலை என்பதால் பல மாநிலங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    தகுதி 

    சென்னையில் நடந்த தேர்வில் 1600 பேர் பங்கேற்பு 

    அதன்படி தகுதியுள்ள 1,600 விண்ணப்பத்தாரர்கள் நேற்று(அக்.,14) சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

    அதில் ஹரியானா ,மாநிலத்தை சேர்ந்த ஓர் மாணவரின் நடவடிக்கை சந்தேகமளித்த நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.

    அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

    தேர்வு 

    ப்ளூடூத் கருவிகள் கொண்டு தேர்வு எழுதி மோசடி 

    அப்போது அவரின் காதில் சிறிய ப்ளூடூத் கருவி மற்றும் வயிற்றில் சிம்கார்டுகளை பொருத்திய மொபைல் போன் வடிவிலுள்ள கருவி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டதில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேர் இதேபோன்ற நூதன மோசடியான வகையில் தேர்வு எழுதி வருவது தெரியவந்துள்ளது.

    இதனிடையே, இவர்களுக்கு வெளியிலிருந்து பதில்களை அளித்து உதவிய குழு தப்பியோடியது என்றும் கூறப்படுகிறது.

    விசாரணை 

    ரூ.10,000 கொடுத்து தேர்வு எழுதியதாக வாக்குமூலம் 

    இதனை தொடர்ந்து மோசடி முறையில் தேர்வெழுதிய 30 பேர் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    காவல்துறை இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ரூ.10,000 கொடுத்து இவ்வாறு தேர்வு எழுதியதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இவர்களுள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபரும் பிடிபட்ட நிலையில் அவரை சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரித்துவரும் காவல்துறை மற்ற நபர்களை ஜாமீனில் விடுவித்துள்ளது.

    யார் 

    மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார்?

    மேலும் இனி இவர்கள் எந்தவொரு அரசு பணிக்கான போட்டித்தேர்விலும் பங்கேற்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் நூதன மோசடியில் ஈடுபட்ட 30 பேரில் 26 பேர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும்,

    2 பேர் உத்தரப்பிரதேசம் மற்ற 2 பேர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

    இவர்கள் ரயிலில் வருகையில் இந்த மோசடிக்கான திட்டத்தினை தீட்டியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே இவர்களுக்கு உதவிய சுங்கத் துறை அதிகாரிகள் யார்? மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    க்ரைம் ஸ்டோரி
    தேர்வு
    சென்னை
    கைது

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது

    தேர்வு

    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது  மாற்றுத்திறனாளி
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி சென்னை

    சென்னை

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம்  அரசு மருத்துவமனை
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு தமிழ்நாடு
    சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன? போராட்டம்
    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்  காவல்துறை

    கைது

    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு  செந்தில் பாலாஜி
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025