NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ
    கடந்த மே மாதம் சென்னையில், தமிழ்நாடு காவல்துறையினர் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மூன்று பேரை கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிக்கிம், மேற்கு வங்கத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை கண்டறிந்த சிபிஐ

    எழுதியவர் Srinath r
    திருத்தியவர் Sindhuja SM
    Oct 14, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலி பாஸ்போர்ட் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரு மாநிலங்களிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, இந்த கும்பலை கைது செய்துள்ளது.

    தற்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கொல்கத்தா, சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளிலும் சிக்கிம் மாநிலத்தில் காங்டாக்கிலும் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

    2nd card

    லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட மூத்த அதிகாரி

    சிலிகுரியில் பாஸ்போர்ட் சேவையின் மூத்த கண்காணிப்பாளர் லகு கேந்த்ராஸ்(PSLK), கௌதம் குமார் ஷாவும் ஒரு இடைத்தரகரும் சிபிஐயால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாஸ்போர்ட் சேவையின் மூத்த கண்காணிப்பாளர் கௌதம் குமார் ஷா, பாஸ்போர்ட் வழங்க ₹1.90 லட்சம் லஞ்சமாக பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

    அவர் பிடிபட்ட பின்னர், சிபிஐ அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

    3rd card

    பல சந்தேக நபர்கள் விசாரணை வலையின் கீழ் உள்ளனர்

    மேலும் சிபிஐ அதிகாரிகள், அவரிடம் இருந்த போலி பாஸ்போர்ட்டுகள், ஆதார் கார்டுகள் மற்றும் பிற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

    "சோதனை நடந்து வருகிறது. மேலும் பல சந்தேக நபர்கள் விசாரணை வலையின் கீழ் உள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் தொடர்பான ஆவணங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்" என அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    கிட்ஜ்ஸ்

    இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

    போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியதற்காக அரசு அதிகாரிகள் உட்பட 24 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    16 அரசு அதிகாரிகள் மீது சிபிஐ பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தகுதியில்லாத மற்றும் இந்திய குடியுரிமை இல்லாத நபர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு அந்த கும்பல் பாஸ்போர்ட் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    50 இடங்களில் சிபிஐ சோதனை

    CBI dismantled fake passport racket operating in West Bengal and Sikkim. Searches underway at around 50 locations including Kolkata, Gangtok, Siliguri, and other locations since last evening. A senior superintendent of Passport Seva Laghu Kendras (PSLK) in Siliguri, along with a…

    — ANI (@ANI) October 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிக்கிம்
    மேற்கு வங்காளம்
    சிபிஐ
    கொல்கத்தா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சிக்கிம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு இந்தியா
    சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம் இந்தியா
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  குழந்தைகள்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் பாஜக
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  உலகம்
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025