NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு 
    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு 

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2023
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவரின் சொத்துக்குவிப்பு வழக்கினை விசாரிக்காமல் இருக்க மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற பொழுது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.

    மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட இவரிடம் நீதிமன்ற அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே, அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த 19ம் தேதி இதுகுறித்த விசாரணை நடந்தது.

    பறிமுதல் 

    அங்கித் திவாரியின் ஜாமீன் மனு கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது

    அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகம்மது ஜின்னா நீதிபதி சிவஞானம் முன்பு ஆஜராகி, கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடமிருந்து அவரது மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.

    அதில் 75 அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் உள்ளது என்றும், அதனால் இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

    இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனு கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஸ்பி சத்யசீலன் தலைமையில் சோதனை மேற்கொள்ள மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    ஆனால் அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இவர்களை சோதனை மேற்கொள்ளவிடாமலும், அலுவலகத்திற்குள் நுழைய விடாமலும் தடுத்ததாக கூறப்படுகிறது.

    சம்மன் 

    விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்

    சில மணிநேர இடையூருக்கு பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கித் திவாரியின் அறையினை சோதனையிட்டுள்ளனர்.

    இதற்கிடையே, தங்கள் பணியினை செய்யவிடாமல் தடுத்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அதன் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அதிகாரிகளின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

    அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுரை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    திண்டுக்கல்
    மதுரை
    அமலாக்கத்துறை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    கைது

    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு கேரளா
    முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது முகேஷ் அம்பானி
    என்ஐஏ ரெய்டில் 3 வங்கதேசத்தினர் கைது; போலி ஆதார் கொண்டு வசித்துவந்தது அம்பலம் என்ஐஏ

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி காவல்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ தமிழக அரசு

    மதுரை

    10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது? ரயில்கள்
    மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்  மல்லிகார்ஜுன் கார்கே
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  சுற்றுலா
    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025