NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ
    அடுத்த செய்திக் கட்டுரை
    4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ

    4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ

    எழுதியவர் Sindhuja SM
    Jan 11, 2024
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு ஸ்டார்ட்-அப் நிறுவனர் ஒருவர் கோவாவில் தனது நான்கு வயது மகனைக் கொன்றுவிட்டு, அவனது சடலத்துடன் கர்நாடகாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நாளுக்கு பிடிபட்டார்.

    அந்த 4 வயது சிறுவன் துண்டு அல்லது தலையணையால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிவித்துள்ளனர்.

    அந்த சிறுவனின் கொலை குறித்து மேலும் வெளியாகி இருக்கும் தகவல் இந்த இணைப்பில் உள்ள பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    தனது 4 வயது மகனை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுசனா சேத்தும்(39), அவரது கணவர் வெங்கட் ராமனும் பிரிந்துவிட்டனர். தற்போது விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

    பிஜேக்ஸ்,

    கணவர் மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டு 

    இந்நிலையில், இந்த வழக்கு குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

    நீதிமன்ற ஆவணங்களின் படி, தனது கணவர் தனக்கு எதிராக குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக சுசனா சேத் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், தனது கணவர் மாதத்திற்கு ரூ.9 லட்சம் வருமானம் பெறுவதால், தனக்கு ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் வாங்கி தர வேண்டும் என்று சுசனா சேத் நீதிமன்றத்தில் முன்பு கோரியுள்ளார்.

    சுசனா சேத்தும், அவரது கணவர் வெங்கட் ராமனும் நவம்பர் 18, 2010 அன்று கொல்கத்தாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    டக்ஜ்வ்க்ன் 

    சுசனா சேத்தும் அவரது மகனும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு 

    ஆகஸ்ட் 14, 2019 அன்று அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

    நீதிமன்ற ஆவணங்களின்படி, ஆகஸ்ட் 2022இல் வெங்கட ராமன் PRக்கு எதிராக சுசனா சேத் குடும்ப வன்முறை வழக்கைத் தாக்கல் செய்த

    குடும்ப வன்முறை காரணமாக மார்ச் 2021க்கு பிறகு தன் கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக சுசனா சேத் கூறியுள்ளார்.

    குடும்ப வன்முறையை நிரூபிப்பதற்காக வாட்ஸ்அப் செய்திகள், படங்கள் மற்றும் மருத்துவப் பதிவுகள் ஆகியவற்றை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    மேலும், தன்னையும், தன் மகனையும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக தனது கணவர் மீது சுசனா சேத் குற்றம் சாட்டியுள்ளார்.

    டக்ஜ்வ்

    தன் மகனை சுசனா சேத் எதற்காக கொன்றார்?

    ஆனால், அந்த குற்றசாட்டுகளை அவரது கணவர் வெங்கட் ராமன் நீதிமன்றத்தின் முன்னிலையில் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

    இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் தன் மகனை அழைத்து கொண்டு கோவா சென்ற சுசனா சேத் அங்கு வைத்து தனது 4 வயது மகனை கொன்றதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் நடக்கும் போது வெங்கட் ராமன் ஜகார்தாவில் இருந்துள்ளார்.

    இதுவரை இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுசனா சேத்தை எப்படி போலீஸார் திறமையாக பிடித்தனர் என்பதன் முழு விவரமும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஜேகோவ்ட்ண்ட்

    சிறுவனின் கொலையில் நீடிக்கும் மர்மங்கள் 

    அந்த நான்கு வயது சிறுவனின் தந்தை வெங்கட் ராமன், தனது குழந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் செவ்வாய்க்கிழமை மாலை ஜகார்த்தாவிலிருந்து இந்தியா திரும்பினார்.

    வெங்கட் ராமன், கர்நாடகாவின் சித்ரதுர்காவுக்கு வந்ததும், தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தார்.

    இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து சில காலியான இருமல் சிரப் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அதுவும் சிறுவனின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும், சுசனா சேத், துண்டு அல்லது தலையணையைப் பயன்படுத்தி தனது மகனின் மூச்சை நிறுத்தி கொன்றதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கோவா
    கொலை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பெங்களூர்

    பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல்  விபத்து
    வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள் வைரல் செய்தி
    IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு  வணிகம்
    கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தை 'பெங்களூரு தெற்கு' என்று பெயர் மாற்ற திட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  கர்நாடகா

    கோவா

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED ஆம் ஆத்மி
    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் இங்கிலாந்து
    கோவா சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: முதல்வர் சாவந்த் என்ன சொல்கிறார் இந்தியா

    கொலை

    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்? டெல்லி
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி? டெல்லி
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கைது
    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025