NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
    பயங்கரவாதிகள் ரியாசி மாவட்டத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது

    ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 10, 2024
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    எனினும், பயங்கரவாதிகள் ரியாசி மாவட்டத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர்.

    முக்கிய முன்னேற்றங்கள்

    ரியாசி பயங்கரவாத தாக்குதலில் முக்கிய முன்னேற்றங்கள்:

    இந்த தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த என்ஐஏ குழு ஒன்று ஜம்முவில் இருந்து ரியாசிக்கு புறப்பட்டுள்ளது.

    NIA-ன் கண்காணிப்பாளர் நிலை அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

    மேலும் அதன் தடயவியல் குழுவும் ரியாசிக்கு செல்கிறது. தாக்குதலின் விளைவாக ஒரு பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த போதிலும் பயங்கரவாதிகள் பேருந்து மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இந்தியா டுடேவிடம் தெரிவித்தனர்.

    "பஸ் பள்ளத்தாக்கில் விழுந்த பிறகும், தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு பயங்கரவாதிகளில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்," என்று டெல்லியைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

    உ.பி.யைச் சேர்ந்த மற்றொருவர், ஆறு பயங்கரவாதிகள் தங்களை தாக்கியதாகவும், அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தாகவும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    தீவிரவாதிகள்
    தீவிரவாதம்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    ஜம்மு காஷ்மீர்

    'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை  எதிர்க்கட்சிகள்
    ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி  இந்தியா
    ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் பாகிஸ்தான்
    உயர்கல்வியில் இஸ்லாமியர்களின் சேர்க்கை 2021ல் 8.5%க்கு மேல் குறைந்துள்ளது: அறிக்கை இந்தியா

    தீவிரவாதிகள்

    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இந்திய ராணுவம்
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி தீவிரவாதம்

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது? இஸ்ரேல்

    பயங்கரவாதம்

    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேல்
    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்  கனடா
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025