NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி
    நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்தது என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்

    பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி

    எழுதியவர் Nivetha P
    Jul 28, 2023
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர், நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

    இதனை கண்டித்து பாமக.,தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஜூலை.,28)என்.எல்.சி. நிறுவனத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது காவல்துறை அவரை கைது செய்த நிலையில், ஆத்திரமடைந்த பாமக'வினர் காவல்துறையினரின் வாகனங்கள்மீது கற்களை வீசியுள்ளனர்.

    இதுப்பெரும் கலவரமாக வெடித்த நிலையில், காவல்துறை துப்பாக்கிச்சூடு, தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்த கலவரம் காரணமாக தமிழக டி.ஜி.பி.,சங்கர் ஜிவால் தற்போது நெய்வேலி செல்லவுள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து பேசிய சங்கர் ஜிவால், "கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் போர்க்களமாக மாறிய அப்பகுதி, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. காவல்துறை மீதும், அவர்கள் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    கலவரம் 

    கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கமாக செல்லும் அனைத்து தொலைதூர அரசு பேருந்துகளும் நிறுத்தம் 

    மேலும் அவர், கலவரம் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கலவரம் நடந்த இடத்தினை மண்டல காவல்துறை ஐ.ஜி.,கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், என்.எல்.சி. நிறுவனத்தினை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்தில் நடந்த கல்வீச்சில் 8 காவல்துறையினரும், 6 செய்தியாளர்களும் காயமடைந்துள்ளனர்.

    அதே போல் கேமரா உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளது.

    என்.எல்.சி. நிறுவனத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இந்த கலவரத்தின் காரணமாக கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கமாக செல்லும் அனைத்து தொலைதூர அரசு பேருந்து சேவைகளும், திருச்சி, சேலம், தஞ்சாவூர், போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    கலவரம்
    அன்புமணி ராமதாஸ்
    கடலூர்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு

    அன்புமணி ராமதாஸ்

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025