NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயரை சூட்டிய தமிழக அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 12, 2024
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும்.

    குறிப்பாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், அதனைத்தொடர்ந்து, பாலமேடு, மற்றும் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால், இத்தனை காலமும், இந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் இருந்தது.

    வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதுக்கு மட்டும் தற்காலிக இடம் அமைக்கப்பட்டு வந்தது.

    பொதுமக்களும், பார்வையாளர்களும் அமர சரியான இடம் இருந்ததில்லை. இது ஒரு கோரிக்கையாக வைக்கப்பட்டது.

    அதற்காக, தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

    card 2

    66 ஏக்கரில் பிரமாண்ட திடல் 

    இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அரங்கத்தினை விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    எனினும் நடப்பது பொங்கல் திருவிழா இந்த வாரத்தில் தொடங்குகிற நிலையில், இந்த அரங்கத்தினை இப்போதைக்கு திறப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    அதனால், இந்த புதிய அரங்கத்தில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    embed

    ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் பெயர்

    #BREAKING | மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது#SunNews | #Alanganallur | #Jallikattu | #Kalaignar100 | @mkstalin pic.twitter.com/5xDIwFMvHZ— Sun News (@sunnewstamil) January 12, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    தமிழக அரசு
    அலங்காநல்லூர்
    மதுரை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  உச்ச நீதிமன்றம்

    தமிழக அரசு

    புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு அரசு பள்ளி
    சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை ஆவின்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு
    தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்  வெள்ளம்

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட் ஜல்லிக்கட்டு

    மதுரை

    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு  எய்ம்ஸ்
    மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம் சென்னை
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் சென்னை
    மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025