
அகமதாபாத் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக காவல்துறை தகவல்
செய்தி முன்னோட்டம்
ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், வியாழன் (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் இருந்த 242 பேரும் பலியானதாக காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. லண்டன் செல்வதற்காக கிளம்பிய இந்த விமானத்தில் 232 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்தனர்.
மேகானி நகர் அருகே உள்ள மருத்துவர்கள் விடுதியின் மெஸ்ஸில் விமானம் மோதிய நிலையில், ஐந்து மருத்துவ மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
விமானம் விபத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த இடத்திலிருந்து அடர்த்தியான கரும்புகை எழுந்தது. விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
மேடே அழைப்பு
விமானிகள் மேடே அழைப்பு
முன்னதாக, விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, விமானி மேடே அழைப்பை விடுத்தார், ஆனால் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. விமானம் விபத்துக்கு முன்பு 825 அடி உயரத்தை மட்டுமே அடைந்ததாகக் கூறப்படுகிறது.
லண்டனுக்கு நீண்ட தூரப் பயணத்திற்காக முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த போதிலும், விமானம் லிஃப்டைத் தடுக்கும் வகையில் கடுமையான செயலிழப்பை சந்தித்ததாக விமான நிபுணர்கள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் ஏழு போர்த்துகீசிய நாட்டவர்கள் அடங்குவர்.
விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் இயங்கியது. அவர் 8,200 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த அனுபவம் கொண்டுள்ளார்.
முதல் அதிகாரி கிளைவ் குந்தர் உதவியுடன் விமானம் இயக்கப்பட்டது என்பதை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உறுதிப்படுத்தியது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
All 242 on board Air India London flight dead, says police
— The Indian Express (@IndianExpress) June 12, 2025
“It appears there are no survivors in the plane crash,” said Commissioner G S Malik, adding that with the plane crashing in a residential area with offices, “some locals would have also died.”
"Exact figures on… pic.twitter.com/xrYMmlk7UR