NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி 
    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி

    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி 

    எழுதியவர் Nivetha P
    May 22, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அருகிலுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்னமும் பலர் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இச்சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டிருந்தார்.

    இதனிடையே, தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து 2 பேர் பலியான சம்பவம் மேலும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள், போதை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, சட்ட-ஒழுங்கு சீர்கேடு, போன்ற ஆட்சியின் பல முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனு கொடுக்கப்போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்காக அவர் அதிமுக நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

    மனு 

    எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இணைந்து கவர்னரிடம் மனு 

    அதன்படி இன்று(மே.,22) காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகேயுள்ள பகுதியில் அதிமுக'வை சேர்ந்தோர் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் திமுக ஆட்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், எடப்பாடி கே பழனிசாமி குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு அவரது தலைமையில் கவர்னர்மாளிகை நோக்கி இந்த திட்டமிட்ட கண்டனப்பேரணியானது நடைபெற்றது.

    சின்னமலை பகுதியிலிருந்து அடையாறு, சர்தார்படேல் சாலை, கிண்டி வழியாக அதிமுக'வினர் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கவர்னரை சந்தித்து, எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மனுவினை அளித்துள்ளார்கள்.

    அதிமுக சார்பில் நடந்த இந்த பேரணியில் எம்.எல்.ஏ.,க்கள்., மாவட்ட செயலாளர்கள்,எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    திமுக
    எடப்பாடி கே பழனிசாமி
    விழுப்புரம்

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    அதிமுக

    அதிமுக வழக்கு: 4வது நாள் விசாரணையின் சுருக்கம் இந்தியா
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். ஓ.பன்னீர் செல்வம்

    திமுக

    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் அதிமுக
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் போராட்டம்
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025