NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!
    23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி

    23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 26, 2024
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விமானப்படை நிறுவப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழு உட்பட 72 வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன.

    இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

    இந்நிகழ்ச்சியை காண அனைவரையும் வரவேற்று Defence PRO எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

    23 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில் மீண்டும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சுமார் 15 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியை காண வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    இந்திய விமானப்படை 92-வது ஆண்டு நிறைவு விழா
    சிறப்பு வான்சாகச நிகழ்ச்சி
    சாரங்க் ஹெலிகாப்டர் சாகசக்குழு உட்பட 72 விமானங்கள்
    📌மெரினா கடற்கரை, சென்னை
    🗓️அக்டோபர் 6 காலை 11 மணிமுதல்
    🙏அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்@IAF_MCC @SpokespersonMoD @DefenceMinIndia @tracomiaf @sarang_iaf pic.twitter.com/ohchFRMrp5

    — Defence PRO Chennai (@Def_PRO_Chennai) September 26, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Vanakkam Chennai! Witness the sky come alive like never before as the Sarang helicopter display team is all set to perform in your city! Catch the team perform some breathtaking manoeuvres over Marina Beach and Air Force Station,Tambaram, towards Air Force day celebrations 🇮🇳 pic.twitter.com/BNrc1E3FLK

    — Sarang Helicopter Display Team (@sarang_iaf) September 25, 2024

    நிகழ்ச்சி நிரல்

    நிகழ்ச்சி நிரல் இதுதான்

    1932ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி நிறுவப்பட்ட இந்திய விமானப்படை, வருடந்தோறும் அக்டோபர் 8-ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு, 92-வது இந்திய விமானப்படை தினம் தேசிய அளவில் விமர்சையாக கொண்டாடப்படும்.

    சென்னை மெரினா கடற்கரையில் "ஏர்ஷோ" எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-இல் நடைபெறும்.

    இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் அக்டோபர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

    அக்டோபர் 6-ஆம் தேதி, காலை 11 மணி முதல் 2 மணி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான வான்வழி சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அக்டோபர் 8-ஆம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானப்படை
    சென்னை
    மெரினா கடற்கரை
    மெரினா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்தியாவின் கண்தானத்தில் 25% தமிழ்நாட்டிலிருந்து தான்: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சுகாதாரத் துறை
    சொந்த ஊருக்கு கிளம்பிய பொதுமக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு ரயில்கள்

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை

    மெரினா

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தமிழக அரசு
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி  கலைஞர் கருணாநிதி
    விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025