NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
    பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 29, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 29, 2016 அன்று, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' என்று அழைக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் துணிச்சலான எல்லை தாண்டிய நடவடிக்கை மூலம், பாகிஸ்தானையும், உலகையும் ஒருசேர திகைக்க வைத்தது, இந்தியா.

    உரியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கான இந்திய ராணுவத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக கூறப்பட்டது இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்.

    2016 செப்டம்பரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள பாகிஸ்தானின் ராணுவ ஏவுதளங்களுக்கு எதிராக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது, 'பயங்கரவாதிகள் மற்றும் அவர்களைப் பாதுகாத்தவர்களுடன் பலத்த உயிரிழப்புகளை' ஏற்படுத்தியது எனக்கூறப்பட்டது.

    அன்றிலிருந்து செப்டம்பர் 29ஆம் தேதியை 'சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக' அரசு கடைப்பிடித்து வருகிறது.

    card 2

    சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிய தகவல்கள்

    செப்டம்பர் 18-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது-ஐ சேர்ந்த ஆயுதமேந்திய நான்கு தீவிரவாதிகளால் ஃபெடாயீன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த பதில்-தாக்குதல் நடத்தப்பட்டது.

    அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, சரியாக பதினொரு நாட்களுக்குப் பிறகு, 29 செப்டம்பர் 2016 அன்று, இந்திய இராணுவ கமாண்டோக்கள் குழுக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கியது.

    card 3

    பயங்கரவாத குழுக்களை கூண்டோடு ஒழித்த தாக்குதல்

    இந்திய அரசு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் எல்லையில் உள்ள "போராளிகளின் ஏவுதளங்களுக்கு" எதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனக் கூறியது, மேலும் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளை" ஏற்படுத்தியதாகக் கூறியது.

    இந்த பழிவாங்கும் தாக்குதலுக்கு பிறகு,இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் "ஜம்மு காஷ்மீர் மற்றும் காஷ்மீருக்குள் ஊடுருவல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராகி வரும் "பயங்கரவாத குழுக்கள்" குறித்து "மிகவும் நம்பகமான மற்றும் குறிப்பிட்ட தகவல்கள்" கிடைத்துள்ளதாகவும், அதனால் ராணுவம் இந்த நடவடிக்கை எடுத்தது" எனத்தெரிவித்தார்.

    card 4

    நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல் 

    இந்த நடவடிக்கை நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது, பாகிஸ்தான் பக்கத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 500 மீட்டர் முதல் 2 கிமீ தொலைவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    செப்டம்பர் 27 அன்று இரவு சுமார் 10 மணியளவில், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் ராணுவ துருப்புக்கள் தங்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, லாஞ்ச்பேட்களில் உள்ள காவலர்கள், துப்பாக்கி சுடும் வீரர்களால் நடுநிலைப்படுத்தப்பட்டனர்.

    இதற்கெல்லாம் முன்பாக, இந்திய இராணுவம், செப்டம்பர் 24 அன்று தனது சிறப்புப் படைக் குழுவை உருவாக்கத் தொடங்கியது. இரவு பார்வை சாதனங்களான Tavor 21 மற்றும் AK-47 தாக்குதல் துப்பாக்கிகளுடன் படை ஆயத்தமாகியது.

    card 5

    ராணுவ வீரர்கள் கொண்டு சென்ற ஆயுதங்கள் 

    ராணுவ வீரர்கள் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகள், தோள்பட்டை ஏவுகணைகள், கைத்துப்பாக்கிகள், உயர் வெடிகுண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் வெடிபொருட்களுடன் எல்லை தண்டி சென்றனர்.

    பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பந்தாடிய பின்னர், இரவோடு இரவாக மீண்டும் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்தனர்.

    இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மறுநாள் தான் வெளிஉலகிற்கு தெரிய வந்தது.

    ஆனால், அங்கே தீவிரவாதிகள் இருப்பதையும், அவர்கள் பலியானதையும் பாகிஸ்தானால் பகிரங்கமாக கூறமுடியவில்லை.

    உண்மையை கூறினால், பயங்கரவாதத்திற்கு துணை போவதாக மற்ற நாடுகளின் கோவத்திற்கு ஆளாக நேரிடும் என்று மௌனமானது பாகிஸ்தான்.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ல், ராணுவ வீரர்களின் துணிச்சலைக் கௌரவிக்க மத்திய அரசு முடிவு செய்து, செப்டம்பர் 28ஆம் தேதியை 'சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக' கொண்டாடியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    பாகிஸ்தான்
    தீவிரவாதம்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    பாகிஸ்தான்

    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  தீவிரவாதிகள்
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  பிரதமர்
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை  இம்ரான் கான்
    'இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்' : பாகிஸ்தான் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி ஹாக்கி போட்டி

    தீவிரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025