NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை
    டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) வசிப்பவர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது

    டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 17, 2025
    07:53 am

    செய்தி முன்னோட்டம்

    திங்கள்கிழமை அதிகாலை தேசிய தலைநகர் டெல்லியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) வசிப்பவர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

    தெற்கு டெல்லியின் தௌலா குவானில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான PTIயிடம் தெரிவித்தார்.

    காலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் X இல் எழுதியது.

    சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் குடியிருப்புப் பகுதிகளில் உணரப்படும் அளவுக்கு வலுவாக இருந்ததால், குடியிருப்பாளர்களிடையே பீதி ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    EQ of M: 4.0, On: 17/02/2025 05:36:55 IST, Lat: 28.59 N, Long: 77.16 E, Depth: 5 Km, Location: New Delhi, Delhi.
    For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/yG6inf3UnK

    — National Center for Seismology (@NCS_Earthquake) February 17, 2025

    எச்சரிக்கை

    பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பிரதமர் எச்சரிக்கை

    நிலஅதிர்வுகள் ஏற்பட்டதும், பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய மக்கள் அமைதியாக இருக்கவும், பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக் கொண்டார்.

    அவர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சாத்தியமான பின்அதிர்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்,"என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

    டெல்லி காவல்துறையும் X இல்,"டெல்லி, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்! எந்த அவசர உதவிக்கும், 112 ஐ டயல் செய்யுங்கள்" என்று எழுதியது.

    ரிக்டர் அளவு 4.0 ஆக இருந்தபோதிலும், நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததாக பல X பயனர்கள் கூறினர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.

    — Narendra Modi (@narendramodi) February 17, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    நிலநடுக்கம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    டெல்லி: 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; $30,000 கேட்டு மிரட்டல் மெயில் வெடிகுண்டு மிரட்டல்
    குளிரில் உறையும் டெல்லி; 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்த வெப்பநிலை குளிர்காலம்
    GRAP-III டெல்லி-NCR முழுவதும் மீண்டும் அமல்; பள்ளிகள் ஹைபிரிட் முறையில் செயல்பட உத்தரவு பள்ளிகளுக்கு விடுமுறை
    டெல்லியில் GRAP IV கட்டுப்பாடுகள் விதிப்பு: எதற்கு அனுமதி, எதற்கு அனுமதியில்லை? காற்று மாசுபாடு

    நிலநடுக்கம்

    நேபாளம் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை  நேபாளம்
    கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்- யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் கர்நாடகா
    நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு  டெல்லி
    நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை நேபாளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025