NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் 
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் 

    எழுதியவர் Nivetha P
    Dec 18, 2023
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், கடந்த 13ம்.,தேதி பார்வையாளர்கள் கூடத்தில் அமர்ந்திருந்த 2 நபர்கள் திடீரென அவைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

    அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.

    இதனைத்தொடர்ந்து 14ம்.,தேதி கூட்டத்தில், இதுகுறித்து விவாதம் நடத்தக்கூறி அமளியில் ஈடுப்பட்டதால், மக்களவை எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 13 பேரும், மாநிலங்களவையில் டெரிக் ஓ.பிரையன் என மொத்தம் 14 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது தொடர் அமளியில் ஈடுபட்ட 33 மக்களவை எம்.பி.க்கள் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    சஸ்பெண்ட் 

    மக்களவை இன்று(டிச.,18)நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது

    இதனையடுத்து காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், கௌரவ் கோகோய் உள்ளிட்டோரும், திமுக கட்சியினை சேர்ந்த நவாஸ்கனி, தமிழச்சி தங்கபாண்டியன், சுமதி, செல்வம், சி.என்.அண்ணாதுரை, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும், கே.ஜெயக்குமார், விஜய்வசந்த், கலாநிதி வீராசாமி, உள்ளிட்ட எம்.பி.க்கள் என மொத்தம் 33பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்துகொள்வதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையினை தொடர்ந்து மக்களவை இன்று(டிச.,18)நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன், 'முன்னதாக செய்யப்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையினை திரும்பப்பெற வேண்டும்' என்றும்,

    'நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அவையில் அறிக்கையளிக்கவேண்டும் என்றும் கோரியதால் நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்' என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    காங்கிரஸ்
    திமுக
    மக்களவை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்

    நாடாளுமன்றம்

    திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு  மக்களவை
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல்  திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் தேர்தல்
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை கொலை

    காங்கிரஸ்

    புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார் புதுச்சேரி
    'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை  எதிர்க்கட்சிகள்
    மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது திரிணாமுல் காங்கிரஸ்
    வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது மணீஷ் திவாரி

    திமுக

    சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு  மு.க ஸ்டாலின்
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  தமிழ்நாடு
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு

    மக்களவை

    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது  நாடாளுமன்றம்
    'நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிக்கும்': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? மணிப்பூர்
    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025