NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?
    பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 12-14 லட்சம் ரூபாய் இழந்தனர்.

    6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 22, 2023
    12:38 pm

    செய்தி முன்னோட்டம்

    லிபியாவில் வைத்து ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திரும்பினர்.

    டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களை வரவேற்க அவர்களது குடும்பங்கள் கண்ணீருடன் காத்திருந்தன.

    இந்த வருடம் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இத்தாலியில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த 17 பேரும் இந்தியாவை விட்டு வெளியேறியனர்.

    பல்வேறு ட்ராவல் ஏஜென்சிகள் மூலம் அவர்கள் "விசா மற்றும் பணி அனுமதி"(பொய்யான ஆவணங்கள்) பெற்று, நாட்டை விட்டு வெளியேறினர்.

    இந்த 17 பேரும் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது நிலங்களை விற்று, சேமிப்புகள் முழுவதையும் செலவழித்து அவர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டிருக்கின்றனர்.

    டிஜிவ்ன்

    அடிமைகளாக விற்கப்பட்ட இந்தியர்கள் 

    ஆனால், தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.

    பொய்யான ஆவணங்களை வைத்து சட்டவிரோதமான முறையில் பிற நாடுகளுக்குள் நுழைய அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் அனுப்பட்டிருக்கின்றனர்.

    இந்த 17 பேரும் முதலில் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அங்கிருந்து இறுதியாக, லிபியாவின் ஜுவாராவிற்கு அவர்களை அழைத்து சென்ற அவர்களது ஏஜென்ட், அவர்களை ஒரு உள்ளூர் குழுவிற்கு விற்றார்.

    ஒவ்வொரு நாட்டிற்கும் அழைத்து செல்வதற்கு அவர்களது ஏஜென்ட் அவர்களிடம் நடு வழியில் அதிக பணம்வ சூலித்து இருக்கிறார்.

    இதனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 12-14 லட்சம் ரூபாய் இழந்தனர்.

    ஜுவாராவில், பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பல மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்தியாவுக்கு திரும்பிய பாதிக்கப்பட்டவர்களை கட்டி அணைத்து அழும் குடும்பங்கள் 

    VIDEO | 17 Indian youths, mostly from Punjab and Haryana, who were released from Tripoli Jail in Libya last month, returned to Delhi on Sunday night. They were in Libya for the past six months because of unscrupulous travel agents who duped them on the pretext of sending them to… pic.twitter.com/BhoXOJibrQ

    — Press Trust of India (@PTI_News) August 21, 2023

    ஜேசிவ்க்

    17 பேரை மீட்க கடுமையாக போராடிய இந்திய தூதரகம் 

    அதன் பிறகு, தகுந்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    "இந்த 17 பேரும் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட பின்னர் லிபியாவில் உள்ள ஸ்வாரா நகரில் ஆயுதமேந்திய குழுவால் சிறைபிடிக்கப்பட்டனர். அப்போதிருந்து, துனிஸில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை சிறையிலிருந்து மீட்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது." என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ராகுல் சர்மா(33) தான் முதன்முதலில் இந்திய தூதரகம் மற்றும் எம்பி சாஹ்னியின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தாங்கள் லிபியாவில் சிக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    "கூகுள் மூலம் தூதரகத்தின் தகவலையும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எம்.பி.யின் தகவலையும் கண்டுபிடித்தேன்" என்று சர்மா தெரிவித்துள்ளார்.

    க்ஜ்கவ்

    நாடு திரும்புவதற்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் தவித்த இளைஞர்கள் 

    ஜூன் 13ஆம் தேதி, லிபிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்டனர்.

    ஆனால், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி அவர்களை லிபிய அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்திருந்தனர்.

    துனிஸில் உள்ள இந்திய தூதர் மற்றும் டெல்லியில் உள்ள வெளியுறவு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க வைக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது.

    நாடு திரும்புவதற்கு கூட பாதிக்கப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய தூதரகம் அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ததற்கான அவசர சான்றிதழ்களை வழங்கியது.

    மேலும், 17 பேருக்கும் தேவையான உணவு, மருந்துகள், உடைகள் உள்ளிட்டவற்றையும் தூதரகம் கவனித்து வந்தது.

    இவர்கள் இந்தியாவிற்கு திரும்புவதற்கான டிக்கெட்டுகளும் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு? லடாக்
    பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி
    லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம்  உலகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 17 தங்கம் வெள்ளி விலை

    டெல்லி

    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  வெள்ளம்
    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் ஹரியானா
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  அரவிந்த் கெஜ்ரிவால்

    உலகம்

    நண்பர்கள் தினம் : அரசியலில் இருந்தும் தனிப்பட்ட வாழ்வில் நட்பு பாராட்டிய அரசியல் தலைவர்கள் நட்பு
    ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு  ரஷ்யா
    அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி அமெரிக்கா
    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா  சீனா
    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர் சிங்கப்பூர்
    மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல் ஆப்கானிஸ்தான்
    ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின் ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025