NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டோடி குடும்பத்திற்கு அடுத்த சிக்கல்: ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழக்கக்கூடும்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டோடி குடும்பத்திற்கு அடுத்த சிக்கல்: ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழக்கக்கூடும்
    சைஃப் அலி கானின் பாரம்பரிய சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது

    பட்டோடி குடும்பத்திற்கு அடுத்த சிக்கல்: ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழக்கக்கூடும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 22, 2025
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பட்டோடி குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்புள்ள மூதாதையர் சொத்துக்கள் (பெரும்பான்மையான போபாலில் உள்ளவை), மீதான தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிய பிறகு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரலாம்.

    மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், 1968ஆம் ஆண்டு எதிரி சொத்துச் சட்டத்தின் கீழ், மூதாதையர் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. அதை தொடர்ந்து தற்போது சைஃப் அலி கானின் பாரம்பரிய சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளது.

    இந்தச் சட்டத்தின்படி, 1947-ம் ஆண்டு பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த தனிநபர்களுக்குச் சொந்தமான சொத்துகளை மத்திய அரசு கோரலாம்.

    விவரங்கள்

    வழக்கின் விவரங்கள் என்ன?

    மும்பையை தளமாகக் கொண்ட எதிரி சொத்துக் காவலர் அலுவலகம், 2015 இல் போபால் நவாப்பின் நிலத்தினை அரசாங்கச் சொத்தாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து பட்டோடி குடும்பம் நீதிமன்றத்திற்குச் சென்றது.

    சைஃப் அலி கான், அவரது தாயார் நடிகை ஷர்மிளா தாகூர், சகோதரிகள் சோஹா அலி கான் மற்றும் சபா அலி கான் மற்றும் மறைந்த மன்சூர் அலி கான் பட்டோடியின் சகோதரி சபிஹா சுல்தான் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான எதிரி சொத்து வழக்கை 2015 இல் உயர்நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

    பட்டோடி குடும்பம் போபால் மற்றும் ரைசெனில் உள்ள தங்கள் நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது, இதில் மாளிகைகள், அரண்மனைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள காடுகள் ஆகியவை அடங்கும்.

    வரலாறு 

    பட்டோடி குடும்ப வரலாறு என்ன?

    1947இல், போபால் ஒரு சமஸ்தானமாக இருந்தது மற்றும் அதன் கடைசி நவாப் நவாப் ஹமிதுல்லா கான் ஆவார்.

    அவர் மன்சூர் அலி கான் பட்டோடியின் தாய்வழி தாத்தா ஆவார்.

    நவாப் கானுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.

    அவர்களில் மூத்த பெண் அபிதா சுல்தான் 1950இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். அவரது இரண்டாவது மகள், சஜிதா சுல்தான், இந்தியாவில் சைஃப் அலி கானின் தாத்தா நவாப் இப்திகார் அலி கான் பட்டோடியை மணந்து, சொத்துக்களின் சட்டப்பூர்வ வாரிசு ஆனார்.

    2019ஆம் ஆண்டில், நீதிமன்றம் சஜிதா சுல்தானை சட்டப்பூர்வ வாரிசாக அங்கீகரித்தது.

    இருப்பினும், அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததன் விளைவாக, மத்திய அரசு, சொத்துக்களை எதிரி சொத்து என்று உரிமை கோரியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைஃப் அலி கான்
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சைஃப் அலி கான்

    கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும் கொள்ளை
    சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார் மும்பை
    சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம் ஷாருக்கான்
    பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர் கைது

    மத்திய பிரதேசம்

    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  இந்தியா
    பெண்களுக்கு அரசு வேலையில் 35% இட ஒதுக்கீடு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு  இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025