
கூலி படத்திற்கு A செர்டிபிகேட் கொடுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய Sun Pictures
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வழங்கிய 'A' (Adults Only) சான்றிதழுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர்களில், இளம் வயது ரசிகர்கள் ஏராளம் என்றும், 'ஏ' சான்றிதழால் அவர்கள் பார்ப்பது பாதிக்கும் என சன் பிக்சர்ஸ் வலியுறுத்துகிறது. 'கூலி' திரைப்படம், ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தினை குறிப்பதுடன், லோகேஷ் கனகராஜுடன் முதல் முறை இணையும் படமாகும். நேற்று, ஆகஸ்ட் 19 அன்று வழக்கை ஏற்ற நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, விசாரணையை 20ம் தேதி பட்டியலிட உத்தரவிட்டார்.
வாதம்
தயாரிப்பாளரின் வாதம் என்ன?
சன் பிக்சர்ஸ் தரப்பில், "'கூலி'யில் உள்ள சண்டைக் காட்சிகள், 'KGF' மற்றும் 'Beast' போன்ற படங்களில் இடம்பெற்ற அளவிற்கே இருந்தன. ஆனால் அப்படங்கள் U/A சான்றிதழ் பெற்றிருந்தன" என வாதிடுகிறது. இந்த நிலையில், 'கூலி'க்கு மட்டும் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது தயாரிப்பு நிறுவனம். சன் பிக்சர்ஸ் பலமுறை U/A சான்றிதழுக்காக விண்ணப்பித்த போதிலும், CBFC-வின் ஆய்வு குழுவும், திருத்தக் குழுவும் வன்முறை காட்சிகளை மேற்கோளாக காட்டி, படம் 'ஏ' வகைப்படுத்தப்படவேண்டும் என முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சில திரையரங்குகளில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுமதிக்க கோரி தியேட்டர் உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.