NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன் சமீபத்திய நேர்காணலில், இயக்குனர் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

    இயக்குனர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் என்ன பிரச்சனை?

    எழுதியவர் Srinath r
    Nov 21, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், தற்போது அது மேலும் முற்றியுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் 25வது படமாக, ஜப்பான் திரைப்படம் வெளியானது. முன்னதாக நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கார்த்தியின் 25 பட இயக்குனர்களும் பங்கேற்றனர்.

    இருப்பினும், முதல் படத்தின் இயக்குனரான அமீர் பங்கேற்கவில்லை. அமீர் பங்கேற்காதது குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.

    மேலும், பருத்திவீரன் திரைப்படத்தில் நடிக்கும் போது கார்த்தி மற்றும் அமீருக்கு இடையில் ஏற்பட்ட, பிரச்சனைகள் இதற்கு காரணமாகவும் சொல்லப்பட்டது.

    2nd card

    பருத்திவீரன் மனரீதியாகவும் பொருளாதரரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்தியது- அமீர்

    இது குறித்து இயக்குனர் அமீரிடம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த அமீர், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என கூறியுள்ளார்.

    மேலும், மூன்றாவது நபர் மூலம் அழைப்பு வந்ததாகவும், தான் மூன்றாவது நபர் மூலம் அழைக்கப்பட்டால், நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர் அல்ல எனவும் கூறியிருந்தார்.

    இவற்றை விட பருத்திவீரன் திரைப்படம் அமீருக்கு, மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும், மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

    இப்படம் தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்த வழக்கு 16 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறிய அமீர், இது எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.

    3rd card

    அமீரின் கருத்துக்களுக்கு ஞானவேல் ராஜா பதில்

    அமீரின் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அமீரின் கருத்துக்களுக்கு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் அளித்துள்ளார்.

    ராம் படத்தை இயக்கி வெளியிட்ட அமீர் அப்படத்திற்கு பின், ₹58 இலட்சம் கடனில் இருந்ததாகவும், அந்த கடனை அடைக்க ஞானவேல் ராஜா உதவியதாகவும், அதன் காரணமாகவே கார்த்தியை வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை இயக்க அமீர் ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

    இருப்பினும் படப்பிடிப்பு தொடங்கிய பின்னர், அமீர் முற்றிலும் மாறிவிட்டதாகவும், மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்டதாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

    பருத்திவீரன் படத்தில், கார்த்திக்கும் தனக்கு மட்டுமே தொடர்புள்ள நிலையில், அமீர், கார்த்தியின் குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்ததை ஞானவேல் ராஜா சுட்டிக்காட்டினார்.

    4th card

    அமீர் நன்றாக திருடுவார்- ஞானவேல் ராஜா

    அமீர் மீது மேலும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஞானவேல் ராஜா, தனக்கும், சூர்யா மற்றும் கார்த்திக்கும் பட வாய்ப்புகள் அமையும், ஆனால் அமீருக்கு பட வாய்ப்புகள் அமையுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ₹2.75 கோடி செலவில், ஆறு மாத காலத்தில் பருத்திவீரன் திரைப்படத்தை முடித்து தருவதாக சொன்ன அமீர், ₹4.40 கோடி செலவில் 2.5 வருடங்களுக்கு பின்னர் முடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார்.

    பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கணக்கு கேட்டபோது, திரையில் 35 பன்றிகள் மட்டுமே தெரிந்த நிலையில், 250 பன்றிகள் பயன்படுத்தப்பட்டதாக கணக்கு காட்டிய அமீர், அதில், 75 பன்றிகள் இறந்து விட்டதாக போலிக் கணக்கு வழங்குவதாகவும், அமீர் நன்றாக திருடுவார் எனவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

    5th card

    "என் பணத்தில் தான் அமீர் சினிமா எடுக்க கற்றுக் கொண்டார்"- ஞானவேல் ராஜா

    ஆர்யா-அமீர் கூட்டணியில் உருவாகயிருந்த சந்தன தேவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இடமும், ₹7 கோடியை அமீர் முறைகேடு செய்துள்ளதாக கூறிய ஞானவேல் ராஜா, அந்த படத்தின் தயாரிப்பாளர், அமீரை ஃபிராடு என்று அழைப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும், தன் பணத்தில் தான் அமீர் சினிமாவை எடுக்க கற்றுக் கொண்டதாக கூறிய ஞானவேல் ராஜா, அமீரை பொருத்தவரையில் யாராவது கிடைத்தால் திருட வேண்டும், உழைத்து சம்பாதிக்க கூடாது என்று வாழ்வதாக பேசி திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்த்தி
    இயக்குனர்
    தீபாவளி
    தீபாவளி 2023

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கார்த்தி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்
    டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்! வைரலான ட்வீட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி பட்ஜெட் 2023

    இயக்குனர்

    KH234 படத்தின் போஸ்டரில் இருக்கும் பாரதியார் கவிதை இயக்குனர் மணிரத்னம்
    'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது  கமல்ஹாசன்
    வெங்கட் பிரபு பிறந்தநாள்- #தளபதி68 அப்டேட் உடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா கல்பாத்தி நடிகர்
    உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு சினிமா

    தீபாவளி

    தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் மருத்துவத்துறை
    சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தகவல் மெட்ரோ
    தடையை மீறி ரயில்களில் பட்டாசுகள் எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்  பட்டாசுகள்
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - தமிழக முதல்வர் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்

    தீபாவளி 2023

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா? தீபாவளி
    விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிக்கள் தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025