Page Loader
விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி
இருவரும் மனமொத்து பிரிவதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2024
02:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இருவரும் மனமொத்து பிரிவதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனுஷ் சினிமாவில் வளர்ந்து வந்தகாலத்தில், ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா, என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இருவரும், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாங்கள் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் மகன்களுக்காக மீண்டும் சேர்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், தற்போது விவாகரத்து கோரியுள்ளது அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

embed

விவாகரத்து கோரியுள்ள தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி

#BREAKING || விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா மனு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல்#actordhanush #aishwaryarajinikanth #Divorce pic.twitter.com/FVn4mHbLTL— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024