NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட்
    வைரலாகும் ஆலியா பட்டின் டீப்ஃபேக்(இடது), உண்மையான வீடியோ(வலது).

    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட்

    எழுதியவர் Srinath r
    Nov 27, 2023
    09:49 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து தற்போது, டீப்ஃபேக்கிற்கு தொழில்நுட்பத்திற்கு ஆலியா பட் இரையாகியுள்ளார்.

    தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆலியா பட்டின் வீடியோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

    அலியாவின் முகத்துடன் நீல நிற மலர் கோ-ஆர்ட் உடை அணிந்த ஒரு பெண், கேமராவுக்கு ஆபாசமான சைகைகள் செய்வதை அந்த வீடியோ காட்டுகிறது. ஆலியா பட்டின் முகம், வேறொரு பெண்ணின் உடலில் இணைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், சிறிது கவனத்துடன் அதைப் பார்த்தால், அது ஆலியா இல்லை என்பதை கண்டறிய முடியும்.

    2nd card

    தொடர்ந்து பரப்பப்படும் நடிகைகளின் டீப்ஃபேக்

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், நடிகை ரஷ்மிகா மந்தனாவின் முகம், ஆபாசமாக உடையணிந்த ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண், லிப்ட்டுக்குள் செல்வது போன்ற காட்சிகளில் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது.

    பின்னர், டைகர் 3 திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் நடித்திருந்த ஒரு காட்சி ஆபாசமான முறையில் டீப்ஃபேக் செய்யப்பட்டது.

    கடந்த வாரம், பாலிவுட் நடிகை கஜோலின் முகம், டிக் டாக் பிரபலம் ரோஸி பிரீன் என்பவர் கேமரா முன் உடைமாற்றும் வீடியோவுடன் இணைக்கப்பட்டு, பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த சட்டம் வகுக்கும் மத்திய அரசு

    அதிகரித்து வரும் டீப்ஃபேக் அச்சுறுத்தல்கள் குறித்து, பிரதமர் மோடி கடந்த வாரம் கவலை தெரிவித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து மத்திய அரசு, சமூக வலைதள நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுனர்களுடன், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்கு பின்னர், பத்து நாட்களுக்குள் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டீப்ஃபேக்
    சமூக வலைத்தளம்
    சமூக ஊடகம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டீப்ஃபேக்

    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார் சமூக வலைத்தளம்

    சமூக வலைத்தளம்

    'சேனல்ஸ்' வசதி தொடர்பான புதிய அப்டேட்டை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    20 மில்லியன் டாலர்களை வருவாய் பகிர்வு திட்டத்தின் கீழ் பகிர்ந்திருக்கும் எக்ஸ் எக்ஸ்
    பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க் எக்ஸ்

    சமூக ஊடகம்

    மாணவர்களிடம் மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதீத ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு ஸ்மார்ட்போன்
    மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு மணிப்பூர்
    ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாலிவுட்
    பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசிக

    மத்திய அரசு

    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை
    உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு இந்தியா
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025