NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி
    ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என அறிவித்தார் டிரம்ப்

    ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 05, 2025
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் மீதான புதிய 25 சதவீத வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கி, டிரம்ப் பரஸ்பர வரிகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டார்.

    இதன் விளைவாக, அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக பங்காளிகளான கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று, பதவியேற்ற பிறகு அமெரிக்க காங்கிரசில் அவர் நிகழ்த்திய முதல் கூட்டு உரையின் போது டிரம்ப், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.

    பரஸ்பர வரி 

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி

    "இந்தியா எங்களிடம் 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை வசூலிக்கிறது, சீனாவின் சராசரி வரி எங்கள் தயாரிப்புகளுக்கு நாங்கள் வசூலிப்பதை விட இரண்டு மடங்கு அதிகம், தென் கொரியாவின் சராசரி வரி நான்கு மடங்கு அதிகம். இது நண்பர்கள் மற்றும் எதிரிகளால் நடக்கிறது. இந்த அமைப்பு அமெரிக்காவிற்கு நியாயமாக இல்லை; அது ஒருபோதும் இல்லை. ஏப்ரல் 2 ஆம் தேதி, பரஸ்பர வரிகள் அமலுக்கு வருகின்றன. அவர்கள் எங்களுக்கு என்ன வரி விதித்தாலும், நாங்கள் அவர்களுக்கு வரி விதிப்போம்," என்று டிரம்ப் கூறினார்.

    ஏப்ரல் 1 ஆம் தேதி, ஏப்ரல் முட்டாள்கள் தினம் என்பதால் அவர் அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பதில்

    டிரம்பின் பரஸ்பர வரிகளுக்கு உலக நாடுகளின் பதில்

    டிரம்பின் வரிகளுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசாங்கம் 21 நாட்களில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதிக்கும் என்று அறிவித்தார்.

    மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த பதிலடி வரிகளுடன் டிரம்பின் புதிய வரிகளுக்கு பதிலளிப்பதாகக் கூறினார்.

    இதற்கிடையில், சீனா அமெரிக்க பண்ணை ஏற்றுமதிகளுக்கு 15 சதவீதம் வரை வரிகளை விதித்து பதிலடி கொடுத்தது மட்டுமல்லாமல், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கையை சுமார் இருபதுக்கும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இந்த பரஸ்பர வரிகளுக்கு இந்தியாவின் பதிலடி என்ன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் அனைத்திற்கும் 25% வரி: டிரம்ப் அமெரிக்கா
    "வீண் முயற்சி": அமெரிக்காவில் புதிய நாணயங்கள் அச்சிடுவதை நிறுத்திய டிரம்ப் அமெரிக்கா
    இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றுச் சரிவைச் சந்தித்தது; ஒரு டாலருக்கு 88 ஐ நெருங்குகிறது ரூபாய்
    சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும், இல்லையென்றால்...: ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் ஹமாஸ்

    அமெரிக்கா

    இந்திய பிரதமர் மோடி எப்படிப்பட்டவர்? டொனால்ட் டிரம்ப் கூறிய அந்த வார்த்தைகள் பிரதமர் மோடி
    பங்களாதேஷை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்; செய்தியாளர் கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் பதில் பங்களாதேஷ்
    டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள் டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை அமிர்தசரஸில் மட்டும் தரையிறக்குவது ஏன்? பஞ்சாபில் வெடித்தது புது சர்ச்சை பஞ்சாப்

    இந்தியா

    ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தத் தயாராக உள்ளது: தொழிலதிபர் நீதா அம்பானி ஒலிம்பிக்
    சீனா இந்தியாவின் நண்பனா? சீனா குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்துக்களிலிருந்து பின்வாங்கியது காங்கிரஸ் காங்கிரஸ்
    ஏர் இந்தியாவின் புதிய பார்ட்னெர்ஷிப் மூலம் இப்போது ஆஸ்திரேலியாவிற்கு எளிதாக பயணிக்கலாம் ஏர் இந்தியா
    எலான் மஸ்கை முந்தும் ஏர்டெல்; இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் பந்தயத்தில் முன்னிலை ஏர்டெல்

    சீனா

    'தொடர்ச்சியான உரையாடலின் சக்தி': சீனாவுடனான எல்லை பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து ராஜ்நாத் சிங்
    2027 முதல் விண்வெளி சுற்றுலா; டிக்கெட் விற்பனையை தொடங்கிய சீன நிறுவனம் விண்வெளி
    எல்லைக்கோடு பகுதியிலிருந்து துருப்புகளை விலக்கும் இந்தியா, சீனா: தற்காலிக கூடாரங்கள் அகற்றம்  இந்தியா-சீனா மோதல்
    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, எல்லையில் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்கின இந்திய மற்றும் சீன ராணுவம் இந்தியா-சீனா மோதல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025