NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / செலவு கட்டுப்படியாகல; ஏப்ரல் முதல் விலையை அதிகரிப்பதாக கார் நிறுவனங்கள் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    செலவு கட்டுப்படியாகல; ஏப்ரல் முதல் விலையை அதிகரிப்பதாக கார் நிறுவனங்கள் அறிவிப்பு
    ஏப்ரல் முதல் விலையை அதிகரிப்பதாக கார் நிறுவனங்கள் அறிவிப்பு

    செலவு கட்டுப்படியாகல; ஏப்ரல் முதல் விலையை அதிகரிப்பதாக கார் நிறுவனங்கள் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 20, 2025
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் கியா உள்ளிட்ட பல முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், ஏப்ரல் 2025 முதல் புதிய விலை உயர்வை அறிவித்துள்ளன.

    இந்த விலை உயர்வுக்கு காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

    பல நிறுவனங்கள் இந்த ஆண்டு இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக விலையை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மூலப்பொருள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி ஹூண்டாய் மோட்டார் இந்தியா 3 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.

    இது ஜனவரியில் நிறுவனத்தின் முந்தைய விலை உயர்வைத் தொடர்ந்து வருகிறது.

    இதேபோல், அதிக உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய டாடா மோட்டார்ஸ் வெவ்வேறு அளவிலான விலை உயர்வை பயணியர் வாகனங்களுக்கு அமல்படுத்தி உள்ளன.

    மாருதி சுஸூகி

    மாருதி சுஸூகியின் விலை உயர்வு

    மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் 4 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.

    ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இதேபோன்ற விலை உயர்வு அறிவிப்பை மேற்கொண்ட பிறகு, இந்த ஆண்டு மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு இது மூன்றாவது அதிகரிப்பாகும்.

    கியா இந்தியாவும் அதன் முழு தயாரிப்பு வரம்பிலும் 3 சதவீத விலை உயர்வை உறுதிப்படுத்தியுள்ளது, இதற்குக் காரணம் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி செலவுகள் அதிகரிப்பதாகும்.

    இதற்கிடையில், ஏப்ரல் முதல் ரெனால்ட் விலைகளை 2 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவும் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    ஆட்டோமொபைல்
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    விலை

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    கார்

    ₹37 லட்சம் விலையில் மெரிடியன் எஸ்யூவி மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜீப் எஸ்யூவி
    இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றது மஹிந்திராவின் தார் ரோக்ஸ் மஹிந்திரா
    ஹைப்ரிட் கார்கள் என்றால் என்ன? அவை வேலை செய்யும் முறை மற்றும் சிறப்பம்சங்கள் தொழில்நுட்பம்
    2024இல் உலகின் மிகப்பெரிய சொகுசு கார் விற்பனையாளர் என்ற பட்டத்தை தக்கவைத்தது பிஎம்டபிள்யூ நிறுவனம் பிஎம்டபிள்யூ

    ஆட்டோமொபைல்

    இந்திய கார் சந்தை வளர்ச்சி 1% ஆக சரிவு; மஹிந்திரா மற்றும் டொயட்டாவின் பங்குகள் மட்டும் சற்றே உயர்வு  கார்
    அப்டேட் செய்யப்பட்ட கோஸ்ட் சீரிஸ் II மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ் ரோல்ஸ் ராய்ஸ்
    சுஸூகி மோட்டார்ஸின் முன்னாள் தலைவர் ஒசாமு சுஸூகி உடல்நலக்குறைவால் காலமானார் சுஸூகி
    இந்தியாவில் களமிறங்குவதாக டெஸ்லாவின் போட்டி நிறுவனம்  இந்தியா

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    ஃபார்முலா 1 காருக்கான அம்சங்களுடன் புதிய காரை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்; 200 கார்களை மட்டும் தயாரிக்க முடிவு கார்
    இந்திய மாணவர்கள் உருவாக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் பிக்கப் டிரக் ஃபோக்ஸ்வேகன்
    இந்திய வாகன சந்தையில் 18% குறைந்த பிரிமியம் SUV விற்பனை வாகனம்
    இந்திய சந்தையில் இரண்டு இலகுரக வர்த்தக எலக்ட்ரிக் வானங்களை அறிமுகம் செய்தது ஆய்லர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள்

    விலை

    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  மத்திய அரசு
    சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்  சென்னை
    '3.9 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்குகின்றனர்' - ஆவின் நிறுவனம்  ஆவின்
    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  எரிவாயு சிலிண்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025