NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை
    பாகிஸ்தானின் கார் தொழில்துறை விற்பனையில் 57% அதிகரித்து, மொத்தம் 9,709 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    பாகிஸ்தானின் வாகன சந்தையை மிஞ்சிய, இந்தியாவின் மாருதி வேகன்ஆர் விற்பனை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 15, 2024
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    பிப்ரவரி 2024இல், இந்தியாவின் வாகன சந்தை விற்பனையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டது.

    குறிப்பாக அதன் அண்டை நாடான, பாகிஸ்தானை விஞ்சியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    2023ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தானின் கார் தொழில்துறை விற்பனையில் 57% அதிகரித்து, மொத்தம் 9,709 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    அதே காலகட்டத்தில் இந்தியா 3.7 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், மாருதி சுசுகி வேகன்ஆர் மட்டும், இந்தியாவில் 19,412 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    அதாவது, பாகிஸ்தான் முழுவதும் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கையை விட, இது இரண்டு மடங்கு அதிகம்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் சந்தை சந்திக்கும் பிரச்சனைகள்

    அதிகரித்து வரும் கார் விலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானின் ஆட்டோமொபைல் துறை போராடி வருகிறது.

    2024 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில், கார் விற்பனை 41% சரிவடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் வாகன சந்தை குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துவருகிறது.

    இந்த காலகட்டத்தில் மொத்தம் 59,699 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக பிசினஸ் ரெக்கார்டரின் அறிக்கை தெரிவிக்கிறது.

    அதிகரித்து வரும் கார் விலைகள், விலையுயர்ந்த நிதியளிப்பு விருப்பங்கள் மற்றும் குடிமக்களின் வாங்கும் சக்தியின் ஒட்டுமொத்த குறைவு போன்ற காரணிகளால் இந்த சரிவு ஏற்படுகிறது.

    எனினும், பிப்ரவரி 2024இல், மலிவு விலை கார் மாடல்களுக்கான தேவை அதிகரித்தது.

    பிப்ரவரி-2023 உடன் ஒப்பிடும்போது 520% ​​விற்பனை அதிகரிப்புக்கு பங்களித்த, பாக் சுஸுகியின் ஆல்டோ, நாட்டின் மிகவும் பிரபலமான பயணிகள் வாகனமாக உருவெடுத்தது.

    வளர்ச்சி

    இந்திய வாகன சந்தை ஏற்றம்; மாருதி சுஸுகி முன்னணி

    இந்தியாவின் வாகனச் சந்தை செழித்து வருகிறது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகளவில் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையாக அதன் இடத்தைப் தக்கவைத்து வருகிறது இந்தியா.

    மாருதி சுஸுகி வேகன்ஆர், பிப்ரவரி 2024 இல் 19,412 யூனிட்களை விற்பனை செய்து சிறந்த நிறுவனமாக உருவெடுத்தது.

    தொடர்ந்து டாடா பன்ச் மற்றும் மாருதி சுசுகி பலேனோ ஆகியவை முறையே 18,438 யூனிட்கள் மற்றும் 17,517 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    மற்ற சிறந்த மாடல்களில் மாருதி சுசுகி டிசையர் மற்றும் பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவை அடங்கும்.

    இந்த புள்ளிவிவரங்கள் பாகிஸ்தானின் போராடி வரும் தொழில்துறையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வலுவான வாகன சந்தை செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மாருதி

    இந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன? எஸ்யூவி
    மாருதியின் புதிய எம்பிவி.. ஜூலை இறுதியில் வெளியீடு.. என்ன ஸ்பெஷல்? கார்
    புதிய ஜிம்னியின் வேரியன்ட்களில் என்னென்ன வசதிகளைக் கொடுத்திருக்கிறது மாருதி? ஆட்டோமொபைல்
    ஜூலை மாதம் வெளியாகவிருக்கும் மாருதியின் புதிய எம்பிவி 'இன்விக்டோ' கார்

    பாகிஸ்தான்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்
    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல் தீவிரவாதிகள்
    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்

    இந்தியா

    ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது எஸ்யூவி
    மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் மகாராஷ்டிரா
    பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் காயம் பெங்களூர்
    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025