NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ 
    இந்திய-கனட உறவுகள் சேதமடைந்துள்ளன.

    'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 12, 2023
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக மீண்டும் தனது குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

    மேலும் தனது நாடு "சட்டத்தின் ஆட்சிக்கு எப்போதும் துணை நிற்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.'

    நிஜ்ஜார் கொல்லப்பட்டது பற்றிய குற்றசாட்டுகளை விசாரிக்க அமெரிக்கா உட்பட பல நட்பு நாடுகளை அணுகியதாகவும், இந்த விவகாரம் குறித்து மேலும் அறிய இந்தியாவை அணுகியதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

    இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது.

    இதனால், இந்திய-கனட உறவுகள் சேதமடைந்துள்ளன.

    ஜேகோ

    மேலும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருப்பதாவது:

    இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

    சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு ஏஜென்சிகள் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருவதால், அனைத்து நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    கனடா எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்கு துணை நிற்கும் நாடாக இருக்கும்.

    ஏனென்றால், பெரிய நாடுகள் சர்வதேசச் சட்டத்தை மதிக்காமல் மீறினால், அது உலகில் உள்ள அனைவரையும் ஆபத்தில் தள்ளிவிடும்.

    நாங்கள் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும் பணியாற்ற முயற்சித்துள்ளோம். தொடர்ந்து அதே போல் செயல்படுவோம். இந்தியாவும் கனேடிய அரசாங்க இராஜதந்திரிகளுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

    இப்படி ஒரு சண்டையை இப்போது நடத்த எங்களுக்கும் விருப்பம் இல்லை. ஆனால் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்கு துணை நிற்போம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    ஜஸ்டின் ட்ரூடோ
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா? அமெரிக்கா
    'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர் உலகம்
    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிரான ஆதரங்களை சேகரிக்க கனடாவுக்கு உதவிய அமெரிக்கா  அமெரிக்கா
    மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் உலகம்

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    '42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்  பீகார்
    சிம் கார்டு பயன்பாட்டை கண்காணிக்க புதிய திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தொலைதொடர்புத் துறை மத்திய அரசு
    மீண்டும் ஒரு உத்தர பிரதேச நகரத்தின் பெயர் மாற்றம்: 'ஹரிகார்' ஆகிறது 'அலிகார்' உத்தரப்பிரதேசம்

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  கனடா
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா

    உலகம்

    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை  ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025