NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான் 
    கடந்த சனியன்று, ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவத்தால் MSC ஏரிஸ் என்ற சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டது

    கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உறுதிப்படுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த சனியன்று, ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவத்தால் MSC ஏரிஸ் என்ற சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டது.

    இந்த தகவல் வெளியானதும், ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி அழைப்பில், MSC ஏரிஸ்-ல் உள்ள 17 இந்தியக் குழு உறுப்பினர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார் எனவும், இது தொடர்பாக தெஹ்ரானிடம் உதவி கோரினார் எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஈரானிய அமைச்சரிடம் பேசிய ஜெய்சங்கர்

    Spoke to Iranian FM @Amirabdolahian this evening.

    Took up the release of 17 Indian crew members of MSC Aries.

    Discussed the current situation in the region. Stressed the importance of avoiding escalation, exercising restraint and returning to diplomacy.

    Agreed to remain…

    — Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) April 14, 2024

    வெளியுறவுத்துறை

    இஸ்ரேலுடனும் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

    இதே வேளையில் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சருடனும் பேசியுள்ளார்.

    ஏப்ரல் 13 அன்று, தி அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட ஒரு வீடியோவில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு சரக்கு கப்பலை, ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய ஈரான் கமாண்டோக்கள் சோதனையிட்டதைக் காட்டியது.

    முன்னதாக ஏப்ரல் 1 அன்று சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமை பிற்பகுதியில் ஈரான் சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கியதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஈரான் அமைச்சருடனான தொலைபேசி அழைப்பின் போது, ​​ஜெய்சங்கர் பதட்டங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    இஸ்ரேலிய அமைச்சருடன் பேசிய ஜெய்சங்கர்

    Just concluded a conversation with Israel FM @Israel_katz.

    Shared our concern at the developments yesterday.

    Discussed the larger regional situation. Agreed to stay in touch.

    — Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) April 14, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    எஸ்.ஜெய்சங்கர்
    வெளியுறவுத்துறை
    இஸ்ரேல்

    சமீபத்திய

    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்

    ஈரான்

    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் அமெரிக்கா
    சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார் அமெரிக்கா
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா

    வெளியுறவுத்துறை

    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் சீனா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
    'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  இந்தியா

    இஸ்ரேல்

    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா
    வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா பல்கலைக்கழகத்தின் மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல்: வைரலாகும் வீடியோ  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025