NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 
    ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதியில் பத்து மீட்புக் குழுக்கள் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு தொடங்கிய பிறகு, ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

    இதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதம், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 50,000 பேர் கொல்லப்பட்டனர்.

    கடந்த சனிக்கிழமை, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்ந்துள்ளது என்று பேரிடர் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக் தெரிவித்துள்ளார்.

    டபவ்க்

    நிவாரண பணிகளுக்கு உதவி தேவைப்படுவதாக அறிவித்த ஆப்கான்

    இந்த நிலநடுக்கங்களினால் 9,240 பேர் காயமடைந்துள்ளனர்.

    1,320 வீடுகள் சேதமடைந்துள்ளன/தரைமட்டமாகியுள்ளன என்றும் சயீக் கூறியுள்ளார்.

    ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதியில் பத்து மீட்புக் குழுக்கள் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களின் கூட்டத்தை சமாளிக்க ஹெராட்டில் உள்ள பிரதான மருத்துவமனைக்கு வெளியே படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    நிவாரண பணிகளுக்கு உணவு, குடிநீர், மருந்து, உடைகள் மற்றும் கூடாரங்கள் தேவைப்படுகின்றன என்று கத்தாரில் உள்ள தாலிபான் அரசு அலுவலகத்தின் தலைவர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.

    யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் ஒன்றிணைவதற்கு அருகில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன.

    ஜூன் 2022இல் கிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்கானிஸ்தான்
    தாலிபான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆப்கானிஸ்தான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  உலக செய்திகள்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா

    தாலிபான்

    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு ஆப்கானிஸ்தான்
    ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர் ட்விட்டர்
    மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல் ஆப்கானிஸ்தான்

    உலகம்

    உலக நதிகள் தினம்: நதிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? சுற்றுச்சூழல்
    காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை  கனடா
    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம்  பாகிஸ்தான்
    இந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா? அமெரிக்கா

    உலக செய்திகள்

    பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள் அமெரிக்கா
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை  இந்தியா
    பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி  பிரேசில்
    அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025