
சீன மாணவர்களின் விசா ரத்து- அமெரிக்கா அதிரடி முடிவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, சீனாவைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தியா பிறகு அதிகமாக கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களே.
2023-24 கல்வியாண்டில், சுமார் 2.7 லட்சம் சீன மாணவர்கள் அமெரிக்கா முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் கல்வி பயின்றுள்ளனர்.
இது, அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் நான்கில் ஒரு சீன மாணவர் என்ற அளவிற்கு அதிகம்.
மோதல்
டிரம்ப் - ஹார்வர்டு பல்கலைக்கழகம் மோதல்
டொனால்ட் டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில உயர் கல்வி நிறுவனங்களுடன் மோதலில் ஈடுபட்டதோடு, அவை பெறும் நிதியை குறைத்தார்.
மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி, சேர்க்கை இடஒதுக்கீட்டையும் 25%இல் இருந்து 15%ஆக குறைத்துள்ளார்.
இந்த சூழலில் தான் சில சீன மாணவர்கள், அமெரிக்க பல்கலைகழகங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் துணை ராணுவ குழுக்களுடன் தொடர்பு கொண்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சித் திட்டங்களில் கூட, சீன அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளையும் மேலும் கடுமையாக்க பரிசீலனை செய்யப்படுவதாக ரூபியோ தெரிவித்துள்ளார்.