உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு உக்ரைனில் உள்ள கெரெட்ஸ்கி கிராம சபையின் தலைமையகத்தில், இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த கூட்டத்தில் பங்கேற்கும் கவுன்சிலர், தனது உடையிலிருந்து மூன்று கையெறி துண்டுகளை எடுத்து, அதை கீழே வீசி வெடிக்கச் செய்தார்.
"இதன் விளைவாக, 26 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்," என்று காவல்துறை அறிக்கை கூறியுள்ளது.
கையெறி குண்டுகளை வீசிய நபரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
ரஷ்யாவுக்கு எதிரான தற்போதைய போரால், பல உக்ரேனியர்களுக்கு ஆயுதங்களுக்கான அணுகல் எளிதாக கிடைக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
கையெறி குண்டுகளை வீசும் கவுன்சிலர் (இந்த காட்சிகள் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்)
#WATCH : Ukraine deputy detonates grenade in council meeting 1 dead , 26 injured.#Ukraine #LiveBlast #grenade pic.twitter.com/Xfh4EW5Dxi
— upuknews (@upuknews1) December 15, 2023