NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு 
    இந்த பெரிய அணை இடிந்து விழுந்ததற்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 07, 2023
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூன் 6) தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பெரிய அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனால், 24 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, 17,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    நோவா ககோவ்கா அணை இடிந்து விழுந்ததையடுத்து, டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் சுமார் 42,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பெரிய அணை இடிந்து விழுந்ததற்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு ககோவ்கா அணையில் இருந்து தான் குளிரூட்டும் நீர் வழங்கப்பட்டு வந்ததது.

    மேலும், இந்த அணையில் தாக்குதல் நடப்பட்டிருப்பதால் "பல இறப்புகள்" ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்ததுள்ளது.

    details

    உயிரியல் பூங்காவில் இருந்த 300 விலங்குகள் உயிரிழந்தன

    17,000 பேர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றும் மொத்தம் 24 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சுமார் 42,000 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இன்று இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேருந்துகள், ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது.

    ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அந்த உயிரியல் பூங்காவில் இருந்த 300 விலங்குகளும் உயிரிழந்தன.

    இதற்கிடையில், உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவை குறிவைத்து குற்றம்சாட்டி வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    உக்ரைன்
    ரஷ்யா

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    உலகம்

    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  இந்தியா
    உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ!  கடற்கரை
    கேன்ஸ் திரைப்பட விழா: ஸ்பைடர் மேன்னுடன் செல்ஃபி எடுத்த விக்கி விக்னேஷ் சிவன்
    "சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு சீனா

    உலக செய்திகள்

    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! பள்ளி மாணவர்கள்
    மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!  உலகம்
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா அமெரிக்கா

    ரஷ்யா

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய்: உக்ரைன் உளவுத்துறை! உலகம்
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம் தொழில்நுட்பம்
    உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025