NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி
    நவம்பர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் டிரம்ப்

    வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 21, 2024
    01:47 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

    ஒரு போட்காஸ்டில்,"பிரகாசமான மாணவர்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்க இந்த நடவடிக்கை தேவை. அங்கு அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள்" என்று டிரம்ப் கூறினார்.

    முன்னதாக, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த ட்ரம்ப், நவம்பர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது.

    குடியுரிமை என்பது அமெரிக்காவின் முக்கிய தேர்தல் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

    பியூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய கருத்துக் கணிப்பில், பதிவு செய்யப்பட்ட அமெரிக்க வாக்காளர்களில் 59% பேர் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க விரும்புவதாகக் காட்டியது.

    குடியுரிமை

    அமெரிக்கா குடியுரிமை பற்றி ட்ரம்பின் நிலைப்பாடு

    "நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள், உங்கள் டிப்ளோமாவின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டைப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டில் தங்குவதற்கு ஒரு கிரீன் கார்டு. அதில் ஜூனியர் கல்லூரிகளும் அடங்கும்," என்று டிரம்ப் 'ஆல்-இன்' போட்காஸ்டில் கூறினார்.

    "கல்லூரியில் பட்டம் பெற்று அவர்கள் இங்கு தங்க விரும்பினர். அவர்களிடம் ஒரு நிறுவனத்திற்கான திட்டம், ஒரு கருத்து இருப்பினும் அவர்களால் தங்க முடியாததால், அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்கிறார்கள். மீண்டும் இந்தியாவுக்கு, அவர்கள் சீனாவுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். அந்த இடங்களில் அதே அடிப்படை நிறுவனத்தை தொடங்குகிறார்கள்....மேலும் அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்தும் பல பில்லியனர்களாக மாறுகிறார்கள், அதை இங்கே செய்திருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.

    அமெரிக்கா மோகம்

    அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் இந்திய மாணவர்கள்

    2023ஆம் ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா 1,40,000 விசாக்களை வழங்கியது.

    இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது என எதிர்பார்க்கப்படுவதால், மாணவர் விசா விண்ணப்பங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கையாள, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தயாராகி வருகிறது.

    இந்தியாவில் இருந்து மாணவர் விண்ணப்பங்களின் அதிகரிப்புக்கு இடமளிக்கும் வகையில், தூதரகம் வழக்கத்தை விட முன்னதாக நேர்காணல்களைத் தொடங்கியுள்ளது.

    நிரந்தரக் குடியுரிமை அட்டை என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் க்ரீன் கார்டு என்பது அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணமாகும்.

    இது வைத்திருப்பவருக்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தை வழங்குகிறது.

    போட்காஸ்டில், உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பிறகு, வெளிநாட்டு மாணவர்கள் கிரீன் கார்டு பெறுவது குறித்த தனது முதல் காலக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார் டிரம்ப்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    அமெரிக்கா

    சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை கொலை
    உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா? உக்ரைன்
    200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம்  கூகுள்
    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025