NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
    சவூதி அரேபியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 30, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கத்திய நாடுகள், இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பெரிய வளரும் நாடுகளை இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

    இதற்காக, அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்(ஆகஸ்ட் 5-6) சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் ஜெட்டாவுக்கு பயணம் செய்யவுள்ளனர்.

    சவூதியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ளாது என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், சீனாவும் இதில் கலந்து கொள்ளாது என்றே கூறப்படுகிறது.

    இந்த உச்சிமாநாட்டிற்கு இந்தியா, பிரேசில்,மெக்சிகோ, எகிப்து, இந்தோனேசியா, சிலி மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளை உக்ரைன் மற்றும் சவுதி அரேபியா அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எல்லையோ

    'அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை': ரஷ்ய அதிபர் 

    மறுபுறம், யுனைடெட் கிங்டம்(யுகே), போலந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்(EU) போன்ற சில நாடுகள் அடுத்த மாதம் ஜெட்டாவில் நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

    உக்ரைன் ஜனாதிபதி கடந்த மே மாதம் ஜெட்டாவில் நடைபெற்ற அரபு லீக் உச்சிமாநாட்டில் பங்கேற்று, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை ஆதரிக்குமாறு அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

    இது நடந்து சில மாதங்களுக்குள், சவூதி அரேபியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை என்றும், உக்ரைன் தாக்குதல் நடத்தும் போது எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்

    சமீபத்திய

    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்

    ரஷ்யா

    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு உக்ரைன்
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா உக்ரைன்
    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு சீனா
    ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உலகம்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025