NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்
    காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள். படம்- ராய்ட்டர்ஸ்.

    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்

    எழுதியவர் Srinath r
    Dec 01, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் ஹமாசிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

    இது குறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில், "மனிதாபிமான போர் இடைநிறுத்தத்திற்கு வழிவகுத்த முயற்சிகளைத் தொடர்வதாக" குறிப்பிட்டுள்ளது.

    மேலும், போர் நிறுத்தம் முடிந்த உடனே காசா பகுதியில் தொடங்கிய தாக்குதல்கள், "மத்தியஸ்த முயற்சிகளை சிக்கலாக்குகிறது மற்றும் மனிதாபிமான பேரழிவை அதிகப்படுத்துகிறது" என கூறியுள்ளது.

    போரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கு, அந்நாடு அதன் அறிக்கையில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    போர் தொடங்கிய சில மணி நேரத்தில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்

    அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில், கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் தொடங்கியது.

    ஏழு நாட்கள் நீடித்த இப்போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததை தொடர்ந்து, இன்று காலை முடிவுக்கு வந்தது.

    இன்று காலை ஹமாஸ், இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தியதால், போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், மக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பாக வழிகள் குறித்த, துண்டு பிரசுரங்களை வான் வழியாக வீசியது.

    அதில், காசா பகுதியின் வரைபடத்துடன் இணைக்கும், QR குறியீட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    போர் தொடங்கிய சில மணி நேரங்களில், இஸ்ரேல் தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை

    Statement |Qatar expresses its deep regret at the resumption of the Israeli aggression against Gaza following the end of the humanitarian pause #MOFAQatar pic.twitter.com/4C2ckADDtO

    — Ministry of Foreign Affairs - Qatar (@MofaQatar_EN) December 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    காசா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  பிரான்ஸ்
    இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா  இஸ்ரேல்

    இஸ்ரேல்

    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  ஈரான்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா

    ஹமாஸ்

    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்

    காசா

    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025