NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி
    உலகம்

    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி

    எழுதியவர் Nivetha P
    August 25, 2023 | 06:24 pm 1 நிமிட வாசிப்பு
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி
    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு

    கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்று கூறப்படுகிறது. தென்-ஆப்பரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்குகொள்ள பிரதமர் சென்றிருந்தார். அப்போது மோடிக்கு, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடோகிஸ் தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறது. அவரது அழைப்பினை ஏற்ற பிரதமர் மோடி, இன்று தென்-ஆப்பரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது. கடைசியாக 1983ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருக்கையில் அங்கு சென்றுள்ளார். அதன் பின்னர் 40 வருடங்களுக்கு பின்னர் பிரதமர் மோடி தான் கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார் என்று தெரிகிறது.

    இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

    சீனாவின் ஆதிக்கத்தினை தாண்டி இந்திய பிரதமரின் இந்த பயணம், புவிசார் அரசியல் முக்கியத்துவத்தினை காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான், அர்ஜென்டீனா மற்றும் துருக்கி இடையே உள்ள கூட்டணியினை எதிர்கொள்ள வேண்டுமெனில் கிரீஸ் நாடுடனான உறவினை இந்தியா வளர்த்துக்கொள்வது அவசியம் என்றும் கூறப்படுகிறது. கிரீஸ் நாட்டிற்கு சென்ற மோடி, அங்கு பேசுகையில், "1998ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடந்ததற்கு அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிரீஸ் மட்டும் தான் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது". "அதேபோல் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகவும் கிரீஸ் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது" என்று கூறியுள்ளார். மேலும் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தற்போது கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நரேந்திர மோடி
    இந்தியா
    கிரீஸ்
    பிரிக்ஸ்

    நரேந்திர மோடி

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு பிரான்ஸ்
    பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி  பிரான்ஸ்

    இந்தியா

    சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா சந்திரயான்
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி நீரஜ் சோப்ரா
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்
    இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை? பைக்

    கிரீஸ்

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்

    பிரிக்ஸ்

    BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு பிரதமர் மோடி
    பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு பிரதமர் மோடி
    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023