NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது போராட்டம்; காரகோரம் நெடுஞ்சாலையை முடக்கிய  கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது போராட்டம்; காரகோரம் நெடுஞ்சாலையை முடக்கிய  கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள்
    பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள் காரகோரம் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டம்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது போராட்டம்; காரகோரம் நெடுஞ்சாலையை முடக்கிய  கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 02, 2025
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பால்டிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டுக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த காரகோரம் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

    பாகிஸ்தான்-சீன வர்த்தகர்கள் நடவடிக்கைக் குழு தலைமையிலான இந்த போராட்டம், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சொந்த கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) உட்பட அனைத்து கட்சியினரின் ஆதரவையும் பெற்றுள்ளது.

    இது ஷெபாஸ் ஷெரீப் அரசின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சோஸ்ட் உலர் துறைமுகத்தில் சுங்க அனுமதியை நிறுத்தி வைத்ததால் ஏற்பட்ட மக்களின் கோபத்தால் வெடித்துள்ளது.

    ஹன்சா, கில்கிட் மற்றும் நகரைச் சேர்ந்த வர்த்தகர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் தங்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்புக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.

    துறைமுகம்

    துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் சரக்குகள்

    250 க்கும் மேற்பட்ட சரக்குகள் ஆறு மாதங்களாக துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றன, இதனால் கடுமையான நிதி இழப்பு ஏற்படுகிறது.

    ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு முறை பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக அனுமதி கோருகின்றனர், மேலும் அவர்களின் குறைகள் தீர்க்கப்படும் வரை சீனா-பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் (CPEC) பாதையை மூடி வைத்திருப்பதாக உறுதிபட தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, போராட்டங்கள் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் இதர பயணிகளையும் சிக்கித் தவிக்க வைத்துள்ளன, நெடுஞ்சாலையில் நீண்ட வாகன வரிசைகள் நீண்டுள்ளன.

    தொழில்துறை வாய்ப்புகள் இல்லாதது, மின்சார பற்றாக்குறை மற்றும் பிராந்தியத்தில் நில அபகரிப்புகள் என நீண்டகாலமாக நிலவி வரும் விரக்திகளையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

    ஆளும் கட்சி 

    ஆளும் கட்சியினரும் அரசுக்கு எதிராக போராட்டம்

    ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் உள்ளூர் தலைவர் ஜாவேத் ஹுசைன் தனது சொந்தக் கட்சியின் அரசாங்கத்தை விமர்சித்தார்.

    வரி வசூலித்த போதிலும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அரசு எதுவும் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

    கில்கிட்-பால்டிஸ்தான் நிர்வாகத்தின் அதிகாரிகள், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஒப்புக்கொண்டு, பொறுப்பை ஷெபாஸ் ஸ்ரீரீப் அரசுக்கு மாற்றினர்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகளை அந்நாட்டு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக தொடர்ந்து மக்களிடையே குமுறல்கள் இருந்து வரும் நிலையில், தொடர் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது போராட்டம்; காரகோரம் நெடுஞ்சாலையை முடக்கிய  கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள் பாகிஸ்தான்
    மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: தேதி மற்றும் இடத்தை வெளியிட்ட ICC  மகளிர் கிரிக்கெட்
    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்

    பாகிஸ்தான்

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது இந்தியா
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் தாக்குதலுக்கு ஏப்ரல் 22 நண்பகலை தேர்வு செய்தது எதற்காக? மேலும் 3 டூரிஸ்ட் இடங்களும் இலக்காக இருந்ததாம்! பஹல்காம்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன? பஹல்காம்
    எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி இந்திய ராணுவம்
    பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு இந்தியா

    உலகம்

    ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு ஆஸ்திரேலியா
    வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன? பாகிஸ்தான் ராணுவம்
    முகமது முய்சு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்; காரணம் என்ன? மாலத்தீவு
    அணுகுண்டு போட்டுவிடுவார்களாம்; ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் இந்தியாவிற்கு மிரட்டல் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு; உதவிய டிஎன்ஏ தொழில்நுட்பம் அமெரிக்கா
    14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான்
    அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல் பாகிஸ்தான் ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025