NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை

    நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை

    எழுதியவர் Srinath r
    Nov 27, 2023
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் கஃபர் அஸ்ஸா பகுதியை பார்வையிட்டனர்.

    இந்த பயணத்தின் போது, நெதன்யாகு தாக்குதலின் சாட்சியங்களை மஸ்க்கிடம் நெதன்யாகு விளக்கினார். இப்பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 20 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கிப்புட்ஸில் நடந்த படுகொலைகள் பற்றி உள்ளூர் கவுன்சில் தலைவர் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர் பிரிவின் பிரதிநிதியிடமிருந்து, மஸ்க் விளக்கங்களைக் கேட்கிறார்.

    மேலும், துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்ட, அச்சமுகத்தின் பாதுகாப்புத் தலைவர் ஓஃபிர் லிப்ஸ்டீன் வீட்டிற்கும், எலான் மஸ்க் அழைத்துச் செல்லப்பட்டார்.

    2nd card

    இஸ்ரேல் ஜனாதிபதி, போர் அமைச்சரவையை சந்திக்கும் மஸ்க்

    இவரின் திடீர் இஸ்ரேல் பயணம், அவருக்கு சொந்தமான ட்விட்டர் வலைதளத்தில், அதிகரித்து வரும் யூத-விரோத பேச்சுக்களை அவர் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

    எலான் மஸ்க், பிரதமர் உடனான சந்திப்புக்கு பின், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் போர் அமைச்சரவையை சந்திக்க உள்ளார்.

    நெதன்யாகுடனான சந்திப்பில், காசாவிற்கு இஸ்ரேல் அனுமதியில்லாமல் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கப்பட மாட்டாது என மஸ்க் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

    முன்னதாக, எரிபொருள் இல்லாமல் காசா பகுதியில் இணைய சேவைகள் முடங்கிய போது, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் காசா பகுதிக்கு எலான் மாஸ்க் இணைய சேவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ௩ர்ட card

    50 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்தம் அதிகரிக்கப்படும்- இஸ்ரேல்

    ஹமாஸ் அமைப்பு ஏற்கனவே போர் நிறுத்தத்தை அதிகரிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

    அதன்படி தற்போது, 50 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்தம் செய்யப்படும் நாட்கள் அதிகரிக்கப்படும் என ஹமாஸ் இடம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    மேலும் தற்போது வரை, 39 இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 184 பணய கைதிகள் காசாவில் உள்ளதாக, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐலன் லெவி தெரிவித்தார்.

    ஹமாஸ் மேலும் நான்கு நாள் போர் நிறுத்தம் கோருவதாகவும்,

    இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தைகளுடன், நாளுக்கு நாளாக போர் நிறுத்தத்தை அதிகரிக்க கேட்பதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    எலான் மஸ்க்

    டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா டெஸ்லா
    இந்திய பயனர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொண்ட X ட்விட்டர்
    'X ப்ரீமியம்' சந்தாதாரர் எண்ணிக்கையைப் பெருக்க எலான் மஸ்க்கின் புதிய திட்டம் ட்விட்டர்
    எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்? ட்விட்டர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து  இந்தியா
    பாலஸ்தீன 'ஹமாஸ்' அமைப்பை இந்தியா ஏன் தடை செய்யவில்லை? ஹமாஸ்
    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள்  ஈரான்
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்

    இஸ்ரேல்

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி காசா

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025