NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
    அடுத்த செய்திக் கட்டுரை
    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து, நெஸ்லேவின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியது

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

    நெஸ்லேவின் இந்த செயல், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு முரணாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    சுவிஸ் கண்காணிப்புக் குழுவான பப்ளிக் ஐ, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து, நெஸ்லேவின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியது.

    ஆய்விற்கு பின்னர் இந்த அதிர்ச்சி தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

    கண்டுபிடிப்புகள்

    நெஸ்லேவின் குழந்தை தயாரிப்புகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் 

    ஆய்வக சோதனைகளில், நிடோ என்று அழைக்கப்படும் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஃபார்முலா பால், மற்றும் ஆறு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான உணவான செரெலாக்கில், சுக்ரோஸ் அல்லது தேன் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    யுனைடெட் கிங்டம்(UK) உட்பட நெஸ்லேவின் முதன்மை ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்படும் சிறு குழந்தைகளுக்கான ஃபார்முலாக்களில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை.

    வளர்ந்த குழந்தைகளை இலக்காகக் கொண்ட சில உணவு பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டாலும், ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்ட தயாரிப்புகளில் சர்க்கரை எதுவும் சோதனைகளில் கண்டறியப்படவில்லை.

    இரட்டை நிலை

    நெஸ்லேவின் "ஆபத்தான இரட்டை தரநிலைகளுக்கு" முடிவு கட்ட தன்னார்வல அமைப்பு அழைப்பு

    ஐரோப்பாவிற்கான WHO வழிகாட்டுதல்கள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த உணவிலும் சர்க்கரைகள்/இனிப்பு சேர்க்கப்படக்கூடாது என்று கூறுகிறது.

    மற்ற பிராந்தியங்களுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், ஐரோப்பிய ஆவணம் உலகளாவிய பொருத்தத்தைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    எடை அதிகரிப்பு மற்றும் பல் சிதைவு போன்ற ஆபத்துகள் காரணமாக நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுக்கு எதிராக இங்கிலாந்து அறிவுறுத்துகிறது.

    இதேபோல், அமெரிக்க அரசாங்க வழிகாட்டுதல்கள் இரண்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வலியுறுத்துகிறது.

    ப்ளிக் ஐயின் விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் லாரன்ட் கேபரெல்,"நெஸ்லே இந்த ஆபத்தான இரட்டை தரநிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." எனக்கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் பருமன்
    ஆப்பிரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை
    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு

    உடல் பருமன்

    உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில விளையாட்டுகள் ஆரோக்கியம்
    கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக் ஆரோக்கியம்
    உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள் மன அழுத்தம்
    அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது உடல் ஆரோக்கியம்

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025